சூதாடிய 8 பேர் கைது
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கரை டவுன் பஞ்., குப்பை கிடங்கு அருகே சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்து சுற்றி வளைத்தனர். விசாரணையில், வெங்கரையை சேர்ந்த சசிகுமார், 20, தணிகைவேல், 23, விக்னேஷ், 24, கருப்பையா, 37, கொளக்காட்டுப்புதுார் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம், 39, சுரேஷ், 35, பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவன், 25, கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், 35, என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை பெற்றோர்கள் கோரிக்கை
-
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து டாக்டர் பணியிடம் காலி அதிகாரிகள் கவனிப்பார்களா?
-
ஆக்கிரமிப்பு வேலியை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் திருவாலவாய நல்லுாரில் தர்ணா போராட்டம்
-
பழனிசாமியை வரவேற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள்
-
உயிர்களை காவு வாங்கும் குவாரி குட்டைகள் கண்டும் காணாமலும் அதிகாரிகள்
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Advertisement
Advertisement