சேதமடைந்த நிலையில் மாற்றுத்திறனாளி கழிவறை


கரூர், கரூர் அருகே பல மாதங்களாக, மாற்றுத்திறனாளிகளுக்கான, பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல்,

சேதமடைந்த நிலையில் உள்ளது.புகழூர் நகராட்சி, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே, சில ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளுக்கு என நவீன வசதியுடன் கூடிய புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடத்தின் உள்பகுதிகளில், சேதம் ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் அங்கு செல்வதை தவிர்த்து விட்டனர்.
எனவே, கழிப்பிடத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு விட, புகழூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

Advertisement