ராகவேந்திரர் கோவிலில் கன்யா பூஜை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோவிலில், நேற்று மாலை கன்யா பூஜை நடந்-தது.

நவராத்திரியின், 9 நாட்களிலும், பெண் குழந்-தைகளை தேவியாக கருதி உபசரிக்க வேண்டும் என தேவி புராணம் கூறுகிறது. அவ்வாறு உபச-ரிக்கையில் தேவியே அந்த வீட்டில் அருள் புரிவ-தாக நம்பிக்கை. பெண் குழந்தைகளிடம் உள்ள சக்தியை, தேவியின் சக்தியாக அங்கீகரிப்பதே கன்யா பூஜை. அதன்படி, கிருஷ்ணகிரி பழைய-பேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய ராகவேந்திர ஸ்வாமிகள் கோவிலில், பிராமணர் நலச்சங்கம் சார்பில், நேற்று மாலை நவராத்திரி கன்யா பூஜை நடந்தது.

இதில், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், சுஹாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவை நடந்தது. 3 சுமங்கலிகள் மற்றும், 25 பெண் குழந்-தைகளுக்கு மாலை அணிவித்து, பூஜை பொருட்கள் வழங்கி, ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து அனைத்து குழந்தைகளையும் பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.

Advertisement