பயிர் விளைச்சல் போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர்:நெல்
விவசாயிகளை ஊக்குவிக்க தமிழக அரசு நாராயணசாமி நாயுடு நெல்
உற்பத்தி திறனுக்கான விருது, எம்.ஜி.ஆர். விருது வழங்கப்படுகிறது.
திருத்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்தில்
அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல்
உற்பத்தி திறனுக்கான விருது, சிறப்பு பரிசாக ரூபாய் 5 லட்சம், 7 ஆயிரம்
மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். போட்டியில் பங்குபெறும் விவசாயி,
குறைந்தபட்சம், 2 ஏக்கர் பரப்பளவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள்
திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.நில உரிமைதாரர்,
குத்தகைதாரர்களும் கலந்து கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட
நெல் ரகங்களை மட்டும் பயிர் செய்ய வேண்டும். உரிய விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும். கூடுதல்
விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்
அலுவலகத்தை அணுகலாம்.
மேலும்
-
உத்தராகண்டிற்கு ரூ.8,260 கோடியில் வளர்ச்சி திட்டம்; வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பரிசு
-
தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
-
அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி; இபிஎஸ் காட்டம்
-
நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி
-
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
-
நவம்பர் 12ல் 12 மாவட்டங்கள், நவ., 13ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை