நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்
தேனி: கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடப்படையில் நடந்து வருகிறது. இதன் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால், நகராட்சி சார்பில் மறு ஏல ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவங்கின. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர் கூடலுாரை சேர்ந்த மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு வேண்டி மனு அளித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்று நேற்று (நவ.18ல்) ஆஜராக ஏற்கனவே நகராட்சி கமிஷனர் முத்துலட்சுமி, சுகாதாரஆய்வாளர் விவேக் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று ஆஜராகாமல், எவ்வித விளக்கமும் அளிக்காமல் இருந்ததால்,இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் ராஜினி உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுதிக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
-
நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்
-
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
-
இளைஞர்களுக்கு கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும் : கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேச்சு
-
தேவையுள்ள இடங்களில் கல்லறைகள் கபர்ஸ்தான் அமைக்கப்படும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் பேட்டி
-
கோயில்களில் சிவராத்திரி பூஜை
Advertisement
Advertisement