வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: திமுக அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து சாதனை புரிகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய விவசாயிகள் தினம் இன்று (டிசம்பர் 23). இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உழவே தலை, உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேசிய விவசாயிகள் தினம் வாழ்த்துகள்.
வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கருணாநிதியின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் சாதனை புரிகிறது.
உழவர்களை வஞ்சிக்கும் மத்திய பாஜ அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம். 100 நாட்கள் வேலைத் திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய பாஜ அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்னல்களையும்…!
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும் விவசாயப் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்.
@quote@இன்னல்களையும், இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.quote
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை. உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம். ஆனால் அந்த வேளாண் உட்பத்தி பொருட்களை முறையாக சேமிக்க போதிய கிடங்குகளை கட்டித்தராமல் திமுக விவசாயிகளுக்கு கொடுக்கிறது சோதனை. விவசாயிகள் மனக்குமுறல்.
தமிழகத்தில் விவசாயத்தின் வளர்ச்சி கடந்த 2024 -25 கால கட்டத்தில் 3.81 சதவீதம் குறைந்துள்ளது எந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் முதல்வர் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை
இனிய நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி! இந்த நம்ம வீட்டுக்கு மேலே இருக்கிற மேல் வீட்டுக் காரன் இருக்கானே? இப்படித்தான் இருக்கிறது முதல்வரின் உழவர்களுக்கான வாழ்த்து! உழவர்களின் வாழ்வு சிறக்கட்டும், எதிர் வரும் தைப்பொங்கலில் உழவர்களின் இல்லமெல்லாம் இனிமை பொங்கட்டும்! இப்படி நல் வார்த்தை மட்டும் சொல்லி பாராட்டாமல் அதே ஒன்றியம் ,அதே வஞ்சிப்பு, அதே வயிற்றில் அடித்தல் உழவர்களுக்கான இன்றைய உழவர் தின வாழ்த்தில் கூடவா அதே எதிர்மறை டயலாக் ?
URUTTU URUTTU ENNA KODUMAI.APPADIYE TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI PAALIYAL KODUMAI ANAITHILUM NAAM FIRST IN INDIA ENA UNMAYA SOLLUNGA.
Production high, but scrap more.
ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட கோமாளியின் ஆட்சி செய்த ஒரே சாதனை டாஸ்மாக் விற்பனை ஒன்று தானே
இங்கே திமுகவுக்கு ஆதரவாக கருத்துப் போடுபவர்கள் ஜிடிபி ஜிடிபி என்று தான் சொல்கிறார்கள் தவிர திமுக அரசு தமிழ்நாட்டில் அதிகமாக கடன் வாங்கியதை ஏன் மறைக்கிறார்கள். மதுவினால் ஏற்படும் கொலை கொள்ளை, கற்பழிப்பு இவைகளை ஏன் மறைக்கிறார்கள். சென்னையில் வடிகாலுக்காக 4000 கோடி செலவழித்து நின்று சொல்லி திரும்பவும் சென்னையில் மழையில் மிதப்பதை ஏன் மறைக்கிறார்கள். நெல்மணிக்கு பாதுகாப்பு இல்லாமல் முளைத்து விட்டது ஏன் மறைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு ஜிடிபி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா. எந்தத் திட்டத்திற்கும் பணம் இல்லை. பிறகு என்ன வேண்டியது இருக்கிறது ஜிடிபி.
சாராயம் குடித்து சாவதிலும் சாதனை.... பாலியல் குற்றத்தில் சாதனை.... ஓட்டை உடைசல் பஸ் விடுவதில் சாதனை.... லஞ்சம் வாங்குவதில் சாதனை.... வெத்து விளம்பரத்தில் சாதனை.... தற்புகழ்ச்சியில் சாதனை.... இப்படி எத்தனையோ சாதனைக்கு நடுவில் மக்கள் அனைவரும் வேதனை....
தமிழ்நாட்டில் வேளாண்துறையின் வளர்ச்சி தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக எதிர்மறையாக மைனஸ் சென்று கொண்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 60 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வாழும் உழவர்களின் வருமானம் குறைந்து விட்டதை அம்பலப் படுத்தும் இந்த புள்ளிவிவரம் .....இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024&25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்துறையின் உற்பத்தி மதிப்பு பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாத நிலையான விலைகளின் அடிப்படையில் ரூ.51,862.76 கோடியாக குறைந்து விட்டது. இது அதற்கு முந்தைய 2023&24ஆம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பான ரூ.52,831.20 கோடியுடன் ஒப்பிடும் போது 1.83% குறைவு ஆகும். ...
கடந்த பத்தாண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இரு ஆண்டுகளிலும் சேர்த்து தமிழக வேளாண்துறை 5.02% வீழ்ச்சியடைந்திருக்கிறது. வேளாண்துறை சவலைப்பிள்ளையாக மாறி வருவதையே இது காட்டுகிறது...ப மா க அறிக்கை .....
இந்த வேளாண் உற்பத்தியில் ரேஷன் கடைக்கு செல்லுகின்ற அரிசியை லாரியில் ஏற்றும்போது மட்டும் வீணாகும் அரிசியால் 1980 கோடி ரூபாய் நஷ்டம் அடைகின்றது என்கிற செய்தியில் இதோ இன்னோர் சர்க்காரியா சொன்னமாதிரி விஞ்ஞான ஊழல் என்றுதான் தோன்றுகின்றது. இதில் பெருமை வேறு.மேலும்
-
உன்னாவ் பாலியல் வழக்கு: பாஜ முன்னாள் எம்எல்ஏ.,வுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
-
என் கணவர் பெயர் குமார், மகன் பெயர் கார்த்திகேயன்; திருமாவுக்கு நடிகை கஸ்தூரி பதில்
-
ஹிந்து இளைஞர் படுகொலைக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
-
50 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ; டில்லி, புனே உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் தவிப்பு
-
மின்சாரத்துறையை சீரழித்து மக்கள் வரிப்பணத்தை திமுக வீணாக்குகிறது; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
பிரசவ இறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு அறிவிப்பு