வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-நமது நிருபர்-
''கூட்டணி ஆட்சியில் பங்கேற்றபோது, காங்கிரஸ் எப்போதும் வளம்மிக்க துறைகளை தேடிப் போனதில்லை,'' என்று காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ., எம்பி.,க்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கும் கருத்துக்கள், திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுப்பணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைத்துறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற வளமிக்க துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.
மஹாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், காதி மற்றும் கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.
எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கூட்டணி அரசில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். முதலில் தயாநிதியும், அவரை தொடர்ந்து ஆ.ராஜாவும், தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தனர்.
ரகுபதி, ராதிகாசெல்வி ஆகியோர் உள்துறை இணை அமைச்சர்களாக இருந்தனர். பழனிமாணிக்கம், நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். 2009 அமைச்சரவையில், தயாநிதி ஜவுளித்துறை அமைச்சராக இருந்தார். ஆ.ராஜா, தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அழகிரி, உரத்துறை அமைச்சராக இருந்தார்.
முந்தைய ஐக்கிய முன்னணி அரசுகளில், திமுகவின் முரசொலி மாறன், தொழில் துறை அமைச்சராகவும், வெங்கட்ராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தனர்.
கூட்டணியை பயன்படுத்தி, பசையான துறைகளை திமுக பெற்றதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், மாணிக்கம் தாகூர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வளம் மிக்க துறை அப்படினா என்ன நெறைய சுருட்டலாம்னு அர்த்தம் ... வளம் இல்லாத துறை கொஞ்சமா தான் சுருட்ட முடியும்னு அர்த்தம் ... அடடா இவனுங்க மக்கள் சேவையை நினைச்சா புல்லரிக்குது ..... மக்களுக்கு சேவை செய்தே தீருவோம்னு என்னமா அடம் பிடிக்கிறானுங்க ...
வளம் மிக்க தொகுதிகள் கேட்காவிட்டால் என்ன? தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் நடைபெறும் மணல் கொள்ளையை, கனிமங்கள் கொள்ளையை, லஞ்சம், ஊழல் என எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு அந்த தவறுகளை கண்டிக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கும்
நீங்கள் எந்த துறையை எங்களிடம் கொடுத்தாலும் அதில் இருந்து வளங்களை சுரண்டி கொள்ளையடிக்கும் திறமை எங்கள் குடும்பத்துக்கு உண்டு.
தீயசக்தி நினைத்தால் சமூக நலதுறையில்கூட பல்லாயிரம் கோடியில் ஊழல் செய்யும் திறமை உண்டு.
காங்கிரஸ் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்கிறது....
அட போங்கப்பா - இதை நேரடியாக சொன்னாலும் திமுக கண்டுகொள்வது இல்லை . காவேரி பிரச்சனையின் போது மத்திய நீர்வளத்துறையை திமுக தலைவர் கருணாநிதி கேட்டு பெற்றிருந்தால் ,காவேரி ,முல்லை பெரியாறு ,முதலிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் .மேலும் ரயில்வே துறையை திமுக தலைவர் கருணாநிதி கேட்டு பெற்றிருந்தால் தமிழ்நாட்டுக்கு புதுப்புது ரயில்வே திட்டங்கள் ,பலப்பல ரயில்கள் கிடைத்திருக்கும் ,தமிழகம் மென்மேலும் முன்னேறியிருக்கும் .ஆனால் குடும்ப முன்னேற்றம் ஒன்றையே திமுக தலைவர் கருணாநிதி கொள்கையாய் கடைப்பிடித்ததால் தமிழகம் பின் நோக்கி சென்றது .இது தான் உண்மை
காங்கிரஸ் தமிழகத்தில் உயிர் வாழ அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு அவசியம். தேசிய அளவில் ராகுலுக்கு மாற்று தேவை.
Keep up the pace Manickam Sir
தும்பை விட்டுட்டு வாலை புடிச்சி என்ன பயன்? குதிரை போன பிறகு லாயத்தை பூட்டி என்ன பயன்? எல்லா மாநிலங்களிலும் தோல்வியை தேடி வரவழைத்து தழுவிக்கொண்டபின் அதிகாரத்தில் பங்கு ன்னு பேசி என்ன பயன்? நீங்க தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. தனித்து களத்தில் இறங்குங்கள். முகஸ் ஐ ஏன் தோளில் சுமந்து கொண்டு திரிகிறீர்கள்? உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? கட்சியை கலைத்து விட்டு பா ஜ க வுடன் ஐக்கியமாகி விடுங்கள். இது வரை பண்ணிய பாவங்களுக்கு விமோசனமாவது கிடைக்கும்.
became among the richest individuals in the world after securing portfolios such as Surface Transport, Communications, and Information Technology. Honesty always pays, and Karunanidhi alone benefited from the honesty shown by these persons.