வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
நமது நிருபர்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறையில், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கும், நியாயமான தேர்தலையும் நடத்தவும் முகமது யூனுஸின் ஆட்சி உறுதியளிக்க வேண்டும் என பிரிட்டன் பார்லியில் அந்நாட்டு எம்பி வலியுறுத்தி உள்ளார்.
பிரிட்டன் பார்லிமென்டில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான கன்சர்வேடிவ் கட்சி எம்பி பாப்பிளாக்மேன் பேசியதாவது: பிப்ரவரி 12ம் தேதி திட்டமிடப்பட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருப்பது குறித்து ஜனநாயக கவலைகள் உள்ளன. ஹிந்து ஆண்கள் தெருக்களில் கொல்லப்படுகிறார்கள்; அவர்களின் வீடுகள் எரிக்கப்படுகின்றன; கோவில்கள் எரிக்கப்படுகின்றன; மற்ற மத சிறுபான்மையினரும் இதே துயரத்தை அனுபவிக்கிறார்கள்.
இதனை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யவும் அரசு செயல்பட வேண்டும்.
ஹிந்துக்கள் மீதான வன்முறையில், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கு
நடவடிக்கை எடுப்பதை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் குறித்து இந்தியா ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதும், அவர்களின் வீடுகள் மீதும் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை நாம் தொடர்ந்து கண்கூடாகக் காண்கிறோம். இதுபோன்ற வகுப்புவாத சம்பவங்கள் விரைவாகவும் உறுதியாகவும் கையாளப்பட வேண்டும். தடுக்கப்பட வேண்டும்" என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (9)
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16 ஜன,2026 - 22:15 Report Abuse
எல்லா ஏழரையும் ஒங்களாலதாண்டா. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஜன,2026 - 21:10 Report Abuse
ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுகவினரால். ஹிந்து கோவில் வருமானங்கள் திருடப்படுகின்றன. இதைப்பற்றியும் நீங்கள் பேசவேண்டும். இந்தியாவில் உள்ள ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
16 ஜன,2026 - 17:57 Report Abuse
இங்கிலாந்து பார்லிமென்டில் உலகம் முழுவதும் ஹிந்துகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில MP களில் இவர் ஒருவர்.
மத்திய அரசு பங்களாதேஷி அரசுக்கு குறைந்த விலையில் அரிசி விற்பது மற்றும் மின்சாரத்தை தடை செய்தல் மூர்க்கன் வழிக்கு வருவான். இல்லாவிட்டால் இந்த பிராந்தியத்தில் நமது நாட்டின் தலைமையை இது அசிங்கப்படுத்தும். 0
0
Reply
Ganapathi Amir - ,இந்தியா
16 ஜன,2026 - 17:36 Report Abuse
யூனுஸ் என்ன நடந்தாலும் தன் ஆட்சிக்கு பங்கம் வந்திரக்கூடாதுனு நினைக்கிறார்.. அமெரிக்க எஜமானர்களின் கட்டளையை அச்சுபிசகாமல் நிறைவேற்றுகிறார்.. 0
0
Reply
ஜெகதீசன் - ,
16 ஜன,2026 - 17:30 Report Abuse
பாலஸ்தீனத்துல யாராவது கொல்லப்பட்டால் இங்கு பொங்கும் எதிர்கட்சி MPகளும் இதர மானங்கெட்ட போராளிகளும் செய்யாததை UK நாட்டு MP செய்திருக்கிறார். 0
0
Reply
RK - ,
16 ஜன,2026 - 17:15 Report Abuse
நம் எம்பிக்களுக்கு கொடுத்த செருப்படி. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
16 ஜன,2026 - 16:51 Report Abuse
தேங்கி வச்ச தண்ணீர் வெளி வர பாக்கிஸ்தான் மதவாத நாட்டின் அடைப்பான் தீர்க்க குழாய் திறக்க உத்தரவு என்ற ISI திறவு கோல் வேண்டும். யூனுஸு ஒரு மாற கலன்ட கேசு அவனும் மத தீவிர வாதி . 0
0
Reply
பிரேம்ஜி - ,
16 ஜன,2026 - 14:36 Report Abuse
நம் எம் பி க்கள் செய்யத் தவறியதால் அவர் செய்கிறார்! வாழ்க! 0
0
Reply
SANKAR - ,
16 ஜன,2026 - 14:30 Report Abuse
what about our 54 inch ? why still silent? 0
0
Reply
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement