எருமப்பட்டி வாய்க்கால் துார்வார வேண்டுகோள்
எருமப்பட்டி: சிங்களகோம்பை ஏரியில் இருந்து செல்லும் எருமப்பட்டி வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எருமப்பட்டி அருகே, கொல்லிமலை அடிவாரத்தில் சிங்கள-கோம்பை ஏரி உள்ளது. இந்த ஏரி, கொல்லிமலையில் கனமழை பெய்யும் காலங்களில், ஆண்டுதோறும் நிரம்பி வருகிறது. ஏரி நிரம்பியதும், வடிகால் மூலம் எருமப்பட்டி வாய்க்கால் வழியாக அங்குள்ள ஏரிக்கும், அதை தொடர்ந்து திப்பரமாகதேவி ஏரிக்கும் சென்று, பின் காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் நீர் வழிப்-பாதை உள்ளது.
2 ஆண்டுகளாக சிங்களகோம்பை ஏரி நிரம்பி, தண்ணீர் வாய்க்கால் வழியாக எருமப்பட்டி ஏரிக்கு சென்றது. தற்போது, தண்ணீர் செல்லும் வாய்க்கால் முழுவதும் முட்புதர் மண்டி உள்-ளதால், மழைநீர் கடைசி வரை செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே, சிங்களகோம்பையில் இருந்து தண்ணீர் செல்லும் வாய்க்-காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசா-யிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஏக்நாத் ஷிண்டேவை வீழ்த்த கூட்டு சேர்ந்த பா.ஜ., - காங்.,: மஹாராஷ்டிராவில் அதிசயம்!
-
ஈரான் சிறைபிடித்த எண்ணெய் கப்பல் இந்தியர்கள் 10 பேரின் நிலை என்ன?
-
நாட்டின் ஜி.டி.பி.,யை தாங்கி பிடிக்கிறது வீடுகளில் 'மறைந்திருக்கும் மூலதனம்'
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி பலவீனம் அடைவதற்கான அளவுகோல் எது?
-
ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்
-
கால் பார்வேடிங் வசதியில் புது மோசடி: எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்