மரம் வளர்பிற்கு பாராட்டு விழா

போடி: போடி அருகே ராசிங்காபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி, சிலமலை பிற்படுத்தப் பட்டோர் மாணவர் விடுதி வளாக பகுதியில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்ததை பாராட்டும் வகையில் விருது வழங்கும் விழா நடந்தது.


அறக்கட்டளை நிறுவனர் பனைமுருகன் முன்னிலை வகித்தார். உதவி வன பாதுகாப்பு அலுவலர் செசில் கில்பர்ட், தலைமை ஆசிரியர் மணிகண்டன், விடுதி காப்பாளர் ரகுநாத் ஆகியோரை பாராட்டி விருது வழங்கினார். ரேஞ்சர் வெங்கடாசலபூபதி, வனவர் சுரேஷ், முதலமைச்சரின் பசுமைத் தோழர் அப்சனா கலந்து கொண்டனர்.

Advertisement