ஜல்லிக்கட்டு காளையை களம் காண வழி அனுப்பிய அண்ணாமலை!
சென்னை: நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கிய நிலையில், தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை போட்டிகளில் பங்கேற்பதற்காக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வழி அனுப்பி வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இன்று (டிசம்பர் 3 ஆம் தேதி) 2026ம் ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இந்த போட்டியில் 900 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பொதுமக்கள் பலரும் கூடினர்.
இந்நிலையில் இன்று தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை போட்டிக்கு அண்ணாமலை வழி அனுப்பி வைத்தார். அவர் தனது காளைகளின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சீசன் வந்தவுடன், இரண்டு மாத பயணத்தை எனது ஜல்லிக்கட்டு காளை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கிறது. அன்புக்குரிய காளையை பெருமிதமும், லேசான சோகமும் நிறைந்த இதயங்களுடன் அனுப்பி வைத்தேன். புகழ்பெற்ற காளையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
சீரிப்பாய அண்ணாமலை போல காளையும் ரெடி. இனி எல்லாம் அவரின் நல்ல சிந்தனை போல நடக்கும். தமிழக மக்களுக்கு சிறந்த நல்லாட்சி நோக்கிய பயணத்தில் இவரின் பங்கு மிக முக்கியம்.
பெற்றோர்கள் சரியாக வளர்க்கவில்லை
யார் ஆதரவாக இருந்தாலும் சரி ஜல்லிக்கட்டு ஓர் பிற்போக்குத்தனமான கலாச்சாரக் கூறுதான். அண்ணாமலையோ பன்னீரோ காளையை அனுப்புகின்றனர். குடும்பத்தினரை மாடு பிடிக்க அனுப்புவதில்லை. பிடிப்பதும் குத்துப்படுவதும் இறப்பதும் இதனை வீரம் என்று கருதும் சிலரே
அஜ்மன் இருந்து வீர வசனம் பேசுவது போல....
தயவுசெய்து நல்ல கண்காணிப்பு இருப்பது நல்லது. ஏனெனில், திராவிட கும்பல் இந்த காளையை ஏதாவது செய்து விடுவார்கள்
நாட்டுல நிறைய சம்பவங்கள் இருக்கு இத்தலம் ஒரு நியூசா போடாதீங்க
இது ஒன்றும் ஒன்றுக்கும் உதவாத சினிமா செய்தி அல்ல. பொங்கலன்று டாஸ்மாக் வசூல் சாதனை செய்தி போடுவார்கள். அப்போது உங்கள் நல்வார்த்தைகளை உதிரிங்கள்மேலும்
-
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
போராடி முன்னேறியுள்ளோம்; வீழ்த்த அனுமதிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்
-
பத்திரமாக தாயகம் திரும்பினார் ஏமன் தீவில் சிக்கித் தவித்த இந்திய பெண்
-
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு; முக்கிய குற்றவாளி சிக்கினான்
-
உழைப்பே உயர்வு தரும்; விமானப்படை தளபதி பெருமிதம்
-
இந்தியாவுக்கு என தனித்துவமான ஏஐ தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்