அமெரிக்காவின் அட்டூழியத்தால் நாடுகள் சந்தித்த பேரழிவு!
வாஷிங்டன்: உலகில் ஏதாவது ஒரு நாடு தனக்கு எதிராக அல்லது தன் நலன்களுக்கு தடையாக இருக்கிறது என கருதினால், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே அமெரிக்கா மாற்றி விடுகிறது. இதற்காக, அந்நாடு எப்போதும் ஒரே மாதிரியான வழிமுறைகளையே பின்பற்றுகிறது.
முதலில், சம்பந்தப்பட்ட நாட்டின் மீது, ஆயுதங்களை குவித்துள்ளனர், பயங்கரவாதிகளை வளர்க்கின்றனர், போதைப் பொருள் கடத்துகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது.
அதன்பின், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள், அதன் தொடர்ச்சியாக ராணுவ தலையீடு அல்லது ஆட்சி கவிழ்ப்பு. இறுதியில், அந்நாட்டில் புதிய அரசை அமைத்து ஜனநாயகத்தை மலர செய்ததாகக் கூறுவர்.
தற்போது, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையாண்டதும் இதே வழிமுறை தான்.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்த உதவியதாகவும், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும் கூறி வெனிசுலாவுக்குள் புகுந்து, 40 பேரை கொன்று, அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்
கடந்த 2001 செப்., 11ல், அல் குவைதா பயங்கரவாதிகள் அமெரிக்காவின் வர்த்தக மையம், ராணுவ தலைமையகமான பென்டகன் உள்ளிட்டவற்றின் மீது விமானங்களை மோத செய்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர், அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன்.
அப்போது அவர், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் பாதுகாப்பில் இருந்தார். அவரை ஒப்படைக்க அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் கோரினார்; தலிபான் மறுத்தது.
இதையடுத்து, 2001 அக்., 7ல், 'ஆப்பரேஷன் எண்டியூரிங் பிரீடம்' என்ற பெயரில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆப்கனுக்குள் நுழைந்தன. தலிபான் ஆட்சி துாக்கி எறியப்பட்டது. ஹமீத் கர்சாய் என்பர் அமெரிக்காவின் ஆதரவுடன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஜனநாயகத்தையும், நிலைத்தன்மையையும் அமெரிக்கா கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகால நீண்ட போருக்கு பின், 2021ல் ஆப்கனை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறின. ஆப்கன் இன்று மீண்டும் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
ஈராக்
கடந்த 2003ல், மேற்கு ஆசிய நாடான ஈராக்கின் அதிபராக இருந்தவர் சதாம் உசைன். இவர், அணு ஆயுதங்கள் உட்பட பெரிய அளவிலான நாசகார ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் குற்றஞ்சாட்டினார்.
இந்த ஆயுதங்கள் அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார். ஈராக்கில் அத்தகைய ஆயுதங்கள் இல்லை என, ஐ.நா., ஆய்வாளர்கள் கூறினர். எனினும் ஐ.நா.,விடம் தெரிவிக்காமல், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஈராக்கிற்குள் 2003 மார்ச் 20ல் நுழைந்தன. அடுத்த சில மாதங்களில் சதாம் உசைன் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
'ஆப்பரேஷன் ரெட் டான்' எனும் ராணுவ நடவடிக்கையின் கீழ், பாதாள அறையில் பதுங்கியிருந்த சதாம் உசைன் கைது செய்யப்பட்டார். அவரை இடைக்கால அரசு துாக்கிலிட்டது.
அமெரிக்காவின் படையெடுப்பால் ஈராக்கில் உள்நாட்டு போர் மூண்டது. ஐ.எஸ்., பயங்கரவாத குழுக்கள் உருவாகின. இதனால், மேற்காசிய பிராந்தியம் இன்றும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது.
பனாமா
மத்திய அமெரிக்க நாடான பனாமாவை, 1989ல், ராணுவ ரீதியாக அமெரிக்கா ஆக்கிரமித்தது. போதைப் பொருள் கடத்தல், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் மானுவல் நோரியேகாவை அகற்றியது.
கவுதமாலா
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில், 1954ல், அமெரிக்கா தன் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., மூலம் ஆட்சி கவிழ்ப்பை நடத்தியது.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போதைய கவுதமாலா அதிபர் ஜாகோபோ ஆர்பென்ஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆர்பென்ஸின்
நில சீர்திருத்தங்களால் அமெரிக்காவின் யுனைடட் புரூட் கம்பெனி பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அமெரிக்க அரசு தலையிட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் தலையீடு காரணமாக, 1960 - 1990 வரை கவுதமாலாவில் வன்முறை மற்றும் உள்நாட்டு போர் நிலவியது.
ஈரான்
மேற்காசிய நாடான ஈரான் எண்ணெய் வளங்கள் நிறைந்த நாடு. இங்கு 1953ல் பிரதமராக இருந்தவர் முகமது மொசாதிக். இவர், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தவர். அவர் ஈரானின் எண்ணெய் வளங்களை அரசுடைமையாக்க முயன்றார். இது பிரிட்டிஷ்- - அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை பெரிதும் பாதித்தது.
இதனால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகள் இணைந்து, 'ஆப்பரேஷன் அஜாக்ஸ்' எனும் ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு, முகமது மொசாதிக்கை ஆட்சியை விட்டு அகற்றியது.
இது போல் ஒன்றிரண்டு அல்ல, கடந்த 120 ஆண்டுகளில், 35 நாடுகளின் ஆட்சியை அமெரிக்கா தலையிட்டு அகற்றி உள்ளது.
உலகளாவிய இத்தகைய தலையீடுகளில், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவால் நடத்தப்பட்டவை. இதை வெளிநாட்டால் திணிக்கப்பட்ட ஆட்சி மாற்றம் என, அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஆட்சி அமைந்த 10 ஆண்டுகளுக்குள், பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு போரை சந்தித்துள்ளன.
டிரம்ப் தற்கொலை செய்து கொள்வாரா ?
பிரிட்டன் ஒரு காலத்தில் இப்படித்தான் ஆணவத்தில் உலகின் சில நாடுகளை இந்திய உள்பட அடக்கி ஆண்டது...நமது நாட்டின் செல்வவளங்களை எல்லாம் சுரண்டி சென்றது. நாட்டை விட்டு போகும்போதும் நமக்கு தீராத தலைவலியாக இருக்கட்டும் என்று பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்தி இஸ்லாமியர்களை கொண்டு இந்துக்களை மீது வன்முறையை வெறியாட்டம் ஏற்படுத்தி விட்டு சென்றது.. இப்பொழுது என்ன ஆனது? வினை விதைத்தவன் வினை அறுப்பான் - இப்பொழுது பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து, அவர்கள் நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகள் அவர்களுக்கு இப்பொழுது தீராத தலைவலியாக மாறி வருகிறது....நாம் எப்பொழுதுமே நாடு பிடிக்க படையெடுத்து சென்று எந்த நாட்டையும் அழித்ததில்லை.. நம்மை தற்காத்துக் கொள்ளவே ராணுவத்தை வைத்துக்கொண்டு இருக்கிறோம்.. ஆனால், உலகின் மற்ற நாடுகள் குறிப்பாக, அமெரிக்க, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீன, போன்ற நாடுகள் ராணுவத்தை வைத்து இருப்பதே நாடு பிடிக்கவும், மற்ற நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தான்... ஏதவாது ஒரு நாடு நன்கு வளர்ச்சி பெறுவதாக மோப்பம் பிடித்தால், அமெரிக்கா அந்த நாட்டிலும் குழப்பத்தை , வன்முறைகளை கட்டவிழ்த்து விட அந்த அந்த நாட்டிலேயே tool kit வைத்து இருக்கும் அமெரிக்கா.. நமது நாட்டிலும் அப்படி வைத்து இருக்கிறது... அதுதான் கான்-கிராஸ். கம்யூனிஸ்ட்ஸ் மற்றும் திராவிஷ கூட்டணி கட்சிகள். உள்நாட்டில் இருந்த கைக்கூலிகளால்தான் நமது நாடு 1000 வருடங்கள் இஸ்லாமியர்களிடமும் பின்பு கிருஸ்த்துவர்களிடமும் அடிமைப்பட்டுக்கிடந்தது.. இப்பொழுது நமது வளர்ச்சி கண்டு பொறுக்கமுடியாமல் அமெரிக்கா மீண்டும் அதே பாணியில் நமது நாட்டிலும் பாகிஸ்தானை, பங்களாதேஷை வைத்துக் கொண்டும், உள்நாட்டில் சிலரை வைத்துக்கொண்டும் குழப்பத்தை ஏற்படுத்த கடும் முயற்சி செய்து வருகிறது.. நமது ஒற்றுமை மிகவும் முக்கியம்.. அதை குலைக்கத்தான் சிறுபான்மை மதங்களின் பாதுகாவலர்கள் என்று இவர்களாகவே சொல்லிக்கொண்டு அவர்களின் ஓட்டுக்களை கவர ஹிந்து விரோத பேச்சுக்கள், நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.. இது மக்களுக்கு புரிந்தால் நாடு காப்பாற்றப்படும்.. இல்லையேல் நாமும் நமது சொந்த நாட்டில் அகதிகளாக மாறும் நிலைமை ஒரு நாள் வரும்..
ரஷ்யா உடனடியாக உக்ரைன்க்கு எதிரான ராணுவ நடவடிக்கையை முடிவிற்கு கொண்டுவந்து அதில் இருந்து விடுபட வேண்டும். அப்போது தான் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு ராணுவ சமன் நிலை இருக்கும். ரஷ்யா , சீன மற்றும் இந்தியா இணைந்து சத்தமே இல்லாமல் அமெரிக்காவை குறைந்த பட்சம் இரண்டாக உடைக்க வேண்டும் ....
இன்றைய தினமலரில் அன்பால் அமையும் உலகு எநிற குறள் வந்துள்ளது. அன்பு குடிகொண்ட நெஞ்சத்தில் அறம் என்னும் நேர்மையும், மறம் என்னும் வீரமும் என்றும் நிலைத்து இருக்கும் என்கிறது குறள்.. அமெரிக்க என்ற நாடெ அமெரிக்க பழங்குடி சிவப்பு இந்தியர்களை விலங்குகள் போல் வேட்டையாடி அழித்து உருவாக்கிய நாடு. இவர்கள் மனித உரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஆப்பிரிக்காவில் இடி அமீன் உருவாகியதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஹார்வார்ட் யூனிவர்சிட்டி போல் இருக்கும் நாட்டில் இப்படி வெள்ளை இடி அமெரிக்கன் -டிரம்ப் உருவாகியத்தை எந்த விதத்தில் ஏற்று கொள்ள முடியும்?
UN Must Punish american leaders
அமைதியை நிலை நாட்ட
போகும் போது சில வலிகள்
வேதனை பலருக்கு கிடைக்கும் அதனை பெரிசாக பேச கூடாது..
டிரம்ப் க்கு நோபல் பரிசு
இன்னும் தரவில்லை பரிசு
கொடுக்கும் வரை கொய்யால..எல்லா நாட்டோடும் போர் தான்..
Guess who else wants USA to invade India and install him at the place of PM Modi?
அமெரிக்காவின் அட்டூழியத்தால் இதுவரை பல நாடுகள் பேரழிவைச் சந்தித்து இருந்தாலும், இந்த லூ... மாக்கான் ஓட்டை டிரம்ப் மூலம் சந்திக்கவிருக்கும் பேரழிவே அதிகமாக இருக்கும். குரங்கு கையில் சிக்கிய பூமாலை கணக்காக, இதன் கையில் அதிகாரம் சிக்கிக் கொண்டது. உலகின் அழிவு ஒருவேளை இந்த பைத்தியம் மூலம் நடைபெற வாய்ப்புண்டு.
வெனிசுலா நாட்டு மக்களே ட்ரும்பின் நடவடிக்கையை பாராட்டுகிறார்கள் . கொண்டாடுகிறார்கள் இதுதான் உண்மை.
It is the case everywhere. Opposition parties would celebrate removal of ruling party..
இப்படி ஒரு நாடு உலகத்துக்கு தேவைமேலும்
-
மாட்டு வண்டி ஓட்டிய குழந்தை தொழிலாளி மீட்பு
-
பதற்ற ஓட்டுச்சாவடி கண்டறிய ஆலோசனை
-
ஏலதாரர்கள் 'சிண்டிகேட்'டால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
-
அ.தி.மு.க.,வில் விருப்ப மனு வீரபாண்டி தொகுதியில் அதிகம்
-
'சீட்' பெறும் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ்., அறிவுரை
-
சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பால் அவதி