லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
ராமநாதபுரம்: தமிழகத்தில், லஞ்ச வழக்குகள் பதிவில், ராமநாதபுரம் மாவட்டம் தொடர்ந்து இரு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு, லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும், பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும், லஞ்சம் பெறுவது குறித்த வழக்குகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் முழுதும் 2025ல் 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோல, மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், கோவையில், 52 வழக்குகளும், மதுரையில், 44 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் கேட்ட, 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என, 22 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
தமிழகம் முழுதும், 2024ம் ஆண்டில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருந்தது. அதேபோல, 2025ம் ஆண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டம், 24 வழக்குகளுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வணிக வரித்துறையில் கடந்த 1985 வருடத்திற்கு பிறகு இதுவரை லஞ்ச ஒழிப்பு துறை வரவில்லை அவ்வளவு நேர்மையா அதிகாரிகள் இருக்கிறாரகள் இல்லை லஞ்சத்தில் உரி கிடைகிறது . லஞ்ச ஒழிப்பு துறைக்கும் கட்டிங் செல்கிறது என பரவலாக பேசுகிறார்கள்
இந்த மாவட்டத்தில் மட்டும் இன்னும் திராவிட தமிழர்கள் இல்லை
தமிழகம் எதிலும் முதலிடம் என்பதில் இதுவும் ஒன்றோ?
ஹைய்யா , இது கூட நல்லாத்தான் இருக்கு. இனிமேல தினமலர்ல, இலஞ்சம் கொடுப்பதில் வாங்குவதில் எந்தெந்த மாவட்டங்கள் முன்னணியில் இருக்கு, எந்தெந்த மாவட்டங்கள் பின் தங்கி இருக்கு, பின் தங்கி இருக்கும் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் ஏன் சரிவர பணியாற்றவில்லை, அம்மாவட்டங்களை முன்னுக்கு கொண்டுவர போர்க்கால நடவடிக்கை எடுப்பது பற்றி முதல்வர் ஆலோசனை போன்ற செய்திகளை எதிர்பார்க்கலாம்.
தமிழகம் முதலிடம் பிடிக்க வில்லையா..தி.மு.க.அரசின்
சாதனை தானே இது...
இதெல்லாம் அப்பாவின் சிறந்த ஆட்சியின் அவலங்களுக்கு ஸாரி சாதனைகளுக்கு உதாரணம். கின்னஸ் சாதனை படைக்க இருக்கும் அப்பாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.
வழக்குப்போட்டவர்களின் எத்தனை பேர் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தார்கள்?மேலும்
-
10 ஆண்டுகால திமுக பயணத்துக்கு முடிவு; தவெகவில் இணைந்த காமராஜரின் வம்சாவளி பேத்தி
-
வெனிசுலா அதிபர் கைது: சீன அதிபர் கண்டனம்
-
சென்னை மின்சார ரயில் மீது பாட்டில் வீச்சு; திடீர் பரபரப்பு
-
அமெரிக்க சிறையில் தவிக்கும் மதுரோவை மீட்க சிறப்பு ஆணையம்; இடைக்கால அதிபர் ரோட்ரிக்ஸ் அறிவிப்பு
-
தி கிரேட் 'கிரேக்' மறைந்தது
-
கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் இறங்கி போராட்டம்; கைது செய்த போலீசார்