நில மோசடியில் ஈடுபட்டவர் கைது
குமாரபாளையம்: குமாரபாளையம், ராகவேந்திரா தெருவை சேர்ந்-தவர் சிவக்குமார், 60; கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். செங்காடு பகுதியில் இவ-ருக்கு சொந்தமான, 10,222
சதுரடி நிலத்தை, வேமன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த சக்-திவேல், 56, என்பவருக்கு விலைக்கு கொடுப்ப-தாக தெரிவித்துள்ளார். இதனால், கடந்த ஏப்., 27ல், சிவக்குமாருக்கு சொந்தமான அலுவல-கத்தில், சக்திவேல், 10 லட்சம் ரூபாய் கொடுத்-துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சிவக்-குமார், ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பம் போட்டு கொடுத்துள்ளார்.
பின், நிலத்தை கிரயம் செய்து தருமாறு, சிவக்கு-மாரிடம், சக்திவேல் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். விசாரித்தபோது, அந்த நிலம் சிவக்குமார் மனைவி மோகன கமலா பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, சிவக்குமாரிடம், சக்-திவேல் கேட்டபோது, தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், சக்-திவேல், குமாரபாளையம் போலீசில் புகார-ளித்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்ப-திவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.
மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்