தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங். தொண்டர்கள் கேட்பது தவறில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. இந்த பாரம்பரிய மாநிலத்தில் எங்களுக்கு என்று கணிசமான ஓட்டு வங்கி இருக்கிறது. தமிழக நலன்களில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சி காங்கிரஸ். அதை மனதில் கொண்டே செயல்பட்டு வருகிறது. ஒன்றாக இணைந்தும் (திமுகவுடன்) செயல்படுகிறோம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. அதில் எந்த தவறும் இல்லை. மேலும், தமிழக மக்களுக்கு உதவக்கூடிய வகையில் (ஆட்சி அதிகாரம், பங்கு ஆகியவற்றை குறிப்பிடுகிறார்) கேட்பதில் எந்த தவறும் இல்லை.
எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் தமிழகத்தில் பாஜவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் காலூன்ற முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அரசு நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது என்பதை மக்கள் விரும்பி உள்ளனர்.
பட்ஜெட் ஒதுக்கீட்டில் மத்திய அரசு நியாயமற்ற முறையில் நடக்கிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்தி, அவர்களின் பங்கை 40 சதவீதமாக குறைத்துள்ளனர்.
இவ்வாறு சச்சின் பைலட் பேட்டி அளித்தார்.
ரொம்ப சிம்பிள். கேட்கிற தொகுதியை குடுத்து அந்தந்த தொகுதியில திமுக ஓட்டு போடாம போனா போச்சி. ஜெயிச்சா தானே ஆட்சியில் பங்கு, பதவி எல்லாம்...
சச்சின் தலைமைக்கு தகுதியானவர் .காங்கிரெஸ்ஸை மீட்டெடுக்கும் வலிமையுடைவர் .இவரிடம் பொறுப்பை ஒப்படைத்து மற்றவர்கள் விலகவேண்டும் .
சச்சின் பைலட்.... தவறான இடத்தில் இருக்கும் நல்ல மனிதர்..... நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றால்.... அவர் இருக்க வேண்டிய இடம் பிஜெபி கட்சி மட்டுமெ...... அவரின் உழைப்புக்கு உரிய அங்கிகாரம் பிஜெபி கட்சியில் கிடைக்கும்..... ராஜஸ்தான் முதல்வராக வரும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும்.
ஒரு கட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தான் அக்கட்சியின் யோக்கியதை மக்களுக்குத் தெரியும்.
1967 முதல் இன்றுவரை கடந்த 58 வருடங்களாக திமுக ஒரு தேர்தலில் கூட கேவலம் ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட தனியாக போட்டியிட்டது கிடையாது. அதனால், திமுகவின் யோக்கியதை யாருக்கும் தெரியாது.
இதன் காரணமாக, திமுக யோக்கியதை குறைவானவனாகவும், யோக்கியதை இல்லாதவனாகவும், யோக்கியதையே தெரியாதவனாகவும் இருக்கிறது. யோக்கியதை தெரியாதவனோடு யாராவது கூட்டணி வைப்பார்களா?
யோக்கியதை தெரியாத திமுகவுடன் அவலமாக, கேவலமாக ஒரு கூட்டணி வைக்கும் அளவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் போக்கற்ற கட்சிகளா? வக்கற்றவர்களா? ஆட்சி அதிகாரத்தில் பற்றற்றவர்களா? தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கமற்றவர்களா?
திமுகவோடு எந்த கட்சி கூட்டணி வைத்தாலும், ஒப்பற்றவர்களாக இருந்த காங்கிரஸ் திமுகவை கடுமையாக எதிர்த்து கண்ணிய அரசியல் செய்ய வேண்டாமா?
திமுகவின் யோக்கியதை தெரியாமல் எந்த கட்சியும் கூட்டணி வைக்கக்கூடாது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளைப் பார்த்த பின்னாடி உங்களுக்கு கூட்டணியிலேயே இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் இலாகா பங்கீடு பற்றி பேசுகிறீர்கள். கேக்கறதோ கேக்குறீங்க ஒரே ஒரு முதலமைச்சர் பதவி மட்டும் கொடுத்தா போதும், வளமான இலாக்காக்கள் எல்லாம் வேண்டாம்ன்னு கேட்டு பாருங்க.
விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக கூறியுள்ளார். அதனால் ஸ்டாலின் அடிமையாக இருப்பதைவிட காங்கிரஸ் விஜய்யுடன் செல்வது தான் சரி.
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவு பெற்றது..
நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்தவரும், அறிவாற்றல் நிறைந்தவருமான திருச்சி வேலுச்சாமி அவர்கள் “பராசக்தி சிவாஜி” மாதிரி பல இடங்களில் பேசி தரையில் விழுந்து கேட்பாரற்றுக் கிடந்த காங்கிரஸை எழுப்பி நிற்க வைத்திருக்கிறார்.
காலிப்பெருங்காய டப்பாவான திமுகவின் ஆட்சியைப் புகழ்ந்து ராஜஸ்தானிலிருந்து முதல் தடவையாக சென்னைக்கு வந்த சச்சின் பைலட் சொல்வதை உண்மை என்று நம்புபவர்கள் கேனையர்களாகத் தான் இருப்பார்கள்.
திமுகவுக்கு ANTI-INCUMBENCY மற்றும் BAD IMAGE இருப்பதால், திமுகவோடு கூட்டணி சேரும் எந்த கட்சியும் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது.
தமிழகத்தில் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் ஸ்வயமாகவே போட்டியிடலாம். எந்த கட்சிகளாவது சீட் கேட்டால், 234-லிருந்து எடுத்துக் கொடுக்கலாம்.
அனைத்து தமிழக மக்களும் இகழும் திமுகவுடன் காங்கிரஸ் செல்வது, வயதான பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு காங்கிரஸ் திருமண மேடையில் அமர்வதற்கு ஒப்பாகும். திமுக காங்கிரஸுக்கும் வேண்டாம். தமிழகத்திற்கும் வேண்டாம்.
உங்க பேச்சை நம்பி இடத்தை கொடுத்தா மடத்தையே கேப்பீங்களே
இவிங்க கூட இருந்தா இவிங்களுக்கும் சேர்த்து திமுக காரன் தான் வேலை பாக்கனும், அதுக்கு இவிங்க போயிட்டா, திமுக காரனுக்கு மட்டும் வேலை பார்த்தாலே போதும்னு மகிழ்ச்சியா தான் இருப்பாங்க, கைக்கு வோட்டு கேட்பதை விட உதயசூரியன் என்று மேலும் 20 தொகுதி உழைக்கணும் , இல்லை வெள்ளையப்பனை இருக்கணும்மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்