பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.8000 ஆக உயர்த்திடுக: பா.ஜ.,
சென்னை: தமிழக
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளதாவது: தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்த ஊழல்
திமுக அரசு, ஏழை மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பணம் பரிசு கொடுத்து ஏமாற்ற
முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மூன்று ஆண்டுகளாக நிலுவையில், தமிழக
மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு பணம் 5,000 சேர்த்து பொங்கல்
பொருட்களின் தொகுப்புடன் 8000 ரூபாய் ரொக்கமாக பொங்கல் பரிசு பணம் வழங்க
முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 2021ல்
பொங்கல் பரிசு உடன் 2500 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு
பொறுப்பேற்றதும் 2022, 2023ம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டுமே
தரப்பட்டது. கடந்த 2024ல் பொங்கல் பரிசு ரொக்கப்பணம் எதுவும்
வழங்கப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றியது. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி
வாக்குகளை பறிப்பதற்காக தமிழக அரசு நாடகம் ஆடுவது வெட்கக்கேடானது.
தமிழகத்தின்
அரசு திட்டங்களில் மற்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய மக்கள் நல
திட்டங்களில் ஊழல் செய்வது போல், தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல்
பரிசு பணத்தையும் நான்கு ஆண்டுகளாக ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு
ஈடுபட்டது வருந்தத்தக்கது.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
தாயுள்ளத்துடன் 2026 பொங்கல் பரிசு தொகை ரூ.3000 மற்றும் நான்காண்டுகளாக
நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகை ரூ.5000 சேர்த்து 2026 பொங்கல்
பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக
கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஆக... தமிழ் நாட்டில் இலவசங்களை பெற்றுத்தான் வாழ்கை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழக மக்களாகிய நாமும்.... நமது வரி வருவாய் பெற்ற நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட.... அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளையும் அரசவாழ்வு வாழ்ந்து நமக்கு பிச்சையிடும் நிலைமையில் தமிழக மக்களாகிய நாம் வைத்துள்ளோம் என்பது வெட்கி தலை குனியவேண்டிய அவமானம் என்பது எத்தனை பேருக்கு விளங்குகிறதோ.... .? தெரியவில்லை... எப்போது மாறுவோம் என்றும் தெரியவில்லை
கேட்கும் கருத்துரை Good
20 000 ஆயிரம் கேட்க வேண்டும்
அரசின் பண இருப்பு கடன் எல்லாம் அறிந்த அரசியல் கட்சிகள் பரிசு அள்ளி வீச கயல் கொடுப்பதை மக்கள் வர வேற்கலாமா?
citizens should use their brain else they will be cheated like this
cos of election dmk will do any shit
நல்ல அறிவுரை கூறுங்கள். பல இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள், நகர எல்லைக்குள் சாலை சந்திப்பு மேம்பாலங்கள், நிலம் கையகப்படுத்தும் கொடுக்கும் காம்பென்சேஷன்.
பிரசாத் அ தி மு க எல்லாத்தையும் சுரண்டிவிட்டு வெறும் கஜானாவை விட்டு விட்டு போனார்கள் அதை வந்து சரி செய்து நாட்டை முன்னேற்ற பாதையில் செல்ல வைத்து நல்லாட்சி கொடுக்கும் தி மு க வை பார்த்து சொல்லுகிறாய் பிஜேபி நாட்டை கூறு போட துடிக்கும் உனக்கு தெரியாத
அது என்னங்க பத்தாயிரம் என்றால் வாங்கலாம் மக்களுக்கும் அரசுக்கும் கவுரவம். இரண்டாம் சேர்த்து பத்தாயிரம் என சொல்லுங்க..
மக்களிடம் வரி போட்டு அரசு பெறுவதும் பிச்சைதான். ஆனால் வருமானம் என்று கூறுகிறோம். உங்கள் கோரிக்கையை மறைமுகமாய் கேட்கவும். நாள்தோறும் மனு பெட்டியில் உங்கள் சங்கத்தினர் கூறியபடி உங்கள் கோரிக்கையை தெரிவிக்கவும். சி சி எ விதிகளின்படி இது தவறு என்றால் வேறு வழி காணுங்கள். தெருவில் போராட்டத்தை தவிர்க்கவும். அரசியல் கட்சிகள் உங்கள் நண்பன் இல்லை என்பதனை அரசு ஊழியர்கள் உணருதல் முக்கியம்.
தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்கும் போது எட்டாயிரமா கொடுத்தா போச்சு. பணம் தானே வேண்டும் எப்போ கொடுத்தால் என்ன? எட்ட்டாஇரம் எப்போ கொடுத்தாலும் பொங்கல்ன் இனிப்பை விட அதிகமா தித்திக்க போவுது. மீண்டும் விடியல் ஆட்சி தான் அப்படி கிடைத்தால்.மேலும்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி