சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: ராஜ்நாத் சிங்
பனாஜி: கோவா கப்பல் கட்டும் தளத்தில் சமுத்திர பிரதாப் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அவர் இந்த கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என பேசுகையில் தெரிவித்தார்.
இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களில் முதலாவதாக சமுத்திர பிரதாப் கப்பலை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 05) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் அர்ப்பணித்தார். இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் தான் சமுத்திரா பிரதாப்.
இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை. இந்த கப்பல் 114. 5 மீட்டர் நீளம், 4,200டன் எடை கொண்டது. 6 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை செல்லக்கூடியது. இக்கப்பலில் ரசாயன கண்டுபிடிப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் மாசுவை அகற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தொலை நோக்கு பார்வையுடன் இந்திய கடற்படையில் சமுத்தர பிரதாப் கப்பல் இணைக்கப்பட்டு உள்ளது. கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானது அல்ல. கடலோர காவல் படையில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரம் அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
இந்த கப்பலை இயக்குவது நமது வலிமையை அதிகரிக்கும். இந்த கப்பல் நமது கூட்டு முயற்சியின் அடையாளம். மாசு கட்டுப்பாட்டை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது இன்றைய சவால்களை எதிர்கொள்ள மிகவும் அவசியம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். நிகழ்ச்சியில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அருமை. மத்திய அரசின் தொலைநோக்கு திட்டம் நம்மை வியந்து பாராட்ட வைக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் 2014க்குப் பின் விரைவான வளர்ச்சி காண்கிறோம் . மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சி அமைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ள மோடிஜியை சசி தரூர் போன்ற மாற்றுக் கட்சியினரும் பாராட்டுவதில் வியப்பேதுமில்லை. சாதனைகள் தொடர வாழ்த்துவோம்மேலும்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி