எல்லாப்புகழும் முருகனுக்கே... திருப்பரங்குன்றம் தீப வழக்கின் மனுதாரர் ராம ரவிக்குமார் மகிழ்ச்சி

36

நமது நிருபர்



திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்த நிலையில், ''எல்லாம் புகழும் முருகனுக்கே...'' என வழக்கின் மனுதாரர் ராம ரவிக்குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


@1brதிருப்பரங்குன்றம் வழக்கின் மனுதாரர் ராம ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த வழக்கில் வாதாடிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தினசரி இந்த விஷயத்தை உலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள். இந்த வழக்கு முருகன் அருளால் வெற்றிஅடைந்து இருக்கிறது. இந்த வெற்றி நிச்சயமாக மேலும் தொடரும் என்று நம்புகிறோம்.

அவதூறுகள்



இந்த வெற்றிக்காக போராடிய உள்ளூர் மக்கள், என்னை வெளியூர்காரர் என்று சொன்னார்கள். நான் மதுரைக்காரன் தான். உள்ளூர்காரன், வெளியூர்காரன் என்று பொய் வாதம் பரப்பினார்கள்.
வழக்கு தொடுத்தவர் மீதும், வழக்கிற்கு நீதி சொன்ன நீதிபதி மீதும் அவதூறு பரப்பினார்கள். நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, சட்டத்தின் பிள்ளையாக எந்தவித வார்த்தைகளையும் பேசவில்லை. இந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு கொடுத்து இருக்கிறது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை நாங்கள் மதிக்கிறோம்.

மனசாட்சி



இந்த வெற்றியை திருப்பரங்குன்றம் மலை மீது உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடிய, திருப்பரங்குன்றம் மக்களுக்கும், இதற்கு முன்பு பலியான, எங்களது ஐயா ராஜகோபால், காளிதாசன், பரம சிவன் உள்ளிட்டோருக்கும் , இந்த நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தன்னுடைய உடலை இறைவனுக்கு அர்ப்பணித்த பூரண சந்திரனுக்கும் சமர்ப்பிக்கிறோம். எங்கள் பணி நிச்சயமாக தொடரும். அவதூறு பரப்பியவர்கள் மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள்.

முருகனுக்கே



எல்லாவற்றையும் முருகன் பார்த்து கொண்டு இருக்கிறார். அவூதூறு பரப்பியவர்கள், அலட்சியமாக பேசியவர்கள், எங்களை அவமானம் படுத்தினீர்கள். அந்த அவமானங்கள் எல்லாத்தையும் அடித்து, உடைத்து, தகர்த்த முருகன் எங்களுக்கு வெகுமானம் தந்து இருக்கிறார்.

எல்லாப் புகழும் முருகனுக்கே, எல்லாம் புகழும் முருகனுக்கே, எல்லாம் புகழும் முருகனுக்கே. தமிழக அரசு அனைத்து மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசு ஆனால் ஹிந்துக்களுக்கு மட்டும் விரோதமாக இருந்தது.

சட்டத்தின் படி



தர்காவுக்கு 15 மீட்டர் தள்ளி தீபம் ஏற்றி கொள்ளலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் சமூக நல்லிணக்கம் கெட்டு போய்விடும் என்று சொன்னார்கள். ஹிந்துக்கள் யாரும் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை.



நீதிமன்றம் உத்தரவு கொடுத்த போதும் கூட நாங்கள் சட்டத்தின்படி தான் மதித்து போனோம். அப்படி இருக்கும் பட்சத்தில், மேல்முறையீடு என்று சொல்லி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வாதிட்டு, கோவிலுக்கு எதிராக, கடவுளுக்கு எதிராக, சமயத்திற்கு எதிராக வழக்கு நடத்தினர். இது ஏற்கத்தக்கது அல்ல. மக்களிடம் வெறுப்புணர்வை இந்த அரசு சம்பாதித்து இருக்கிறது. இவ்வாறு ராம ரவிக்குமார் கூறினார்.

Advertisement