பாலமேடு ஜல்லிக்கட்டு: 2 மணிநேரம் தாமதமாக வந்தார் உதயநிதி
மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி 2 மணிநேரம் தாமதமாக துவங்கியது. இதனை துவக்கி வைக்க 7.30 மணிக்கு வரவேண்டிய துணை முதல்வர் உதயநிதி 9.30 மணிக்கு தான் வந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மதுரையின் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

மாட்டுப் பொங்கல் தினமான இன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது.

துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், 7.30 மணிக்கு துவங்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, 9 மணியாகியும் உதயநிதி வராத நிலையில், கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.

அதன்பிறகு, மைதானம் வந்த அமைச்சர் உதயநிதி கொடியசைத்து வைத்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.
அப்போது, ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் உதயநிதிக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உதயநிதியுடன் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரியும் கலந்து கொண்டார்.

காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பதுங்கி, பாய்ந்து அடக்கினர்.

முன்னதாக, கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உள்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மருத்துவ சோதனை நடந்தது. அதன்பிறகு, தகுதி வாய்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமாட அனுமதிக்கப்பட்டனர்.

மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர் மாடம், இரு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.


இதில், முதலிடம் படித்த பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து (21)
பா மாதவன் - chennai,இந்தியா
16 ஜன,2026 - 18:42 Report Abuse
நல்ல வேளை சூரியன் இருக்கும் போதே அதாவது "சூரியன் மறையும் முன்பு" வந்து விட்டார். 0
0
Reply
Sun - ,
16 ஜன,2026 - 15:47 Report Abuse
இதுவரை ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்களுக்குத்தான் தாங்கள் துவக்கியது போல ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இன்று துவக்கப் பட்டு நடைபெற்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் நடுவில் மீண்டும் ஒரு முறை துவக்கி வைத்து ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார் உதயநிதி. பெருந்தன்மையாக உதயநிதி என்ன செய்திருக்க வேண்டும்? நான் வர லேட்டாகும்! கலெக்டர் அல்லது மாவட்ட அமைச்சரை விட்டு துவக்கி வைக்கச் சொல்லுங்கள் நான் நடுவில் வந்து கலந்து கொள்கிறேன் எனச் சொல்லி இருக்க வேண்டும். பெருந் தன்மையா? அப்படி என்றால் என்ன? என்று கேட்பவர்கள் நம் திராவிட மாடல்ஸ்! 0
0
Reply
ram - ,
16 ஜன,2026 - 15:23 Report Abuse
வரவே இல்லையினாலும் காத்திருக்கும் 1000 ரூபாய் கூட்டம். 0
0
Reply
naranam - ,
16 ஜன,2026 - 14:41 Report Abuse
20 மணி நேரம் தாமதமாக வந்தாலும் தீய முக வினர் காத்திருப்பார்கள் 200 ரூபாய் வாங்கிக் கொண்டு. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
16 ஜன,2026 - 13:05 Report Abuse
அவர் துணை முதல்வர் மேலும் நியமனம் இல்லை மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் , 8 மணிநேரம் காக்க வைத்து 41 பேர் சாக காரணம் ஆன அவரை பற்றி பேசுங்கள் 0
0
Reply
Vasan - ,இந்தியா
16 ஜன,2026 - 12:50 Report Abuse
அடுத்த வருடம் வர மாட்டார், தாமதமாக. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஜன,2026 - 12:39 Report Abuse
உதயநிதி 2 மணிநேரம் தாமதம் 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
16 ஜன,2026 - 11:57 Report Abuse
மன்னர் பரம்பரை காலதாமதமாக வரலாம். அதை யாரும் கேட்கக்கக்கூடாது. சாரு சென்னையில் இருந்து வந்தாரா? துபாயில் இருந்தா? 0
0
Reply
kulanthai kannan - ,
16 ஜன,2026 - 11:12 Report Abuse
காலை சீக்கிரம் எழுவது உதயநிதிக்கு சிரமம் என்பது தெரிந்ததுதானே 0
0
Reply
seshadri - chennai,இந்தியா
16 ஜன,2026 - 11:08 Report Abuse
ஆர் எஸ் எஸ் மட்டும்தான் யார் வந்தாலும் வாரா விட்டாலும் சரியாக அந்த நேரத்திக்கு விசில் ஊதி ஆரம்பித்து விடுவார்கள் அதே போல் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முடித்து விடுவார்கள். 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
Advertisement
Advertisement