திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்வோம்; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாவட்ட கலெக்டர் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுகிற வழக்கம் என்பது தமிழகத்தில் கிடையாது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என்று மேல் முறையீட்டில் மாவட்ட நிர்வாகம் கேட்டு இருந்தார்கள். இன்றைக்கு நீதிபதிகள் பொதுமக்களுக்கு மட்டும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் தலைமையில், சிலர் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சட்டத்திற்கு புறம்பான உத்தரவுகளை தந்து இருக்கிறார்கள்.
@quote@அதன் மீது தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறது. quote
பொதுவாகவே ஒரு இடத்தில் ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று சொன்னால், அந்த தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்னால், நீதிபதிகள் இதற்கு முன் ஏற்கனவே தீபம் ஏற்றி இருக்கிறார்கள் என்று, அதற்கான ஆதாரங்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் நாங்கள் இன்றைக்கு அனுமதி தருகிறோம் என்று சொல்ல வேண்டும். எந்த விதமான ஆதாரங்களும் கிடையாது. இதுவரை எந்த காலகட்டத்திலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை.
முழுக்க முழுக்க தவறு
நீதித்துறையை களங்கபடுத்த முடியாது. சட்டத்திற்கு புறம்பான செயல் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர எங்களுக்கு முழு உரிமையும் உண்டு. தமிழர்களின் கலாசாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.
@quote@
யாரோ ஒருவர் கேட்டதால் அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்வது முழுக்க முழுக்க தவறு. quote
இதுவரை இல்லாத பழக்கத்தை, இதுவரை இல்லாத வழக்கத்தை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக உள்ளே நுழைப்பது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
கருத்து சொல்லுங்க!
திருப்பரங்குன்றம் வழக்கில், உயர்நீதிமன்ற கிளையின் 2 நீதிபதிகள் பெஞ்ச் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பது
1.சரி
2.தவறு
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்று இது. எல்லா திருடர்களையும் போலவே கல்வி நிறுவனங்கள், மருத்துவ, பொறியியல் கல்லூரிகள், மருத்துவ மனைகள் தமிழ்நாடு எங்கும் சொத்து குவிப்பு அறக்கட்டளைகள் மூலம் வரி ஏய்ப்பு... ஒருதிருடன்கூட சிறையில் இல்லை ...5 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ இரண்டே முறையோ தொகுதியில் சாராயம், பிரியாணி, சேலை, வேட்டி, செலவுக்கு கள்ளப்பணம் விநியோகம் ....ஒத்தனா, ரெண்டு பேரா ...அத்தனையும் களவாணிங்க. தமிழ் இனம் ...வெக்கம் மாணம் சூடு சொரணை ...எதுவுமே இல்ல
யாரு அப்பா வீட்டு காசு? நீயெல்லாம் ஒரு மந்திரியாய்யா?
சரி அதை ஏன் கோவில் நிதியில் இருந்து செய்யணும்? நீங்கள் கொள்ளையடித்து வைத்துள்ள பலப்பல லட்சம் கோடிகளில் இருந்து செலவு செய்து வழக்கை நடத்த வேண்டியதுதானே?
தவறு. முருக கடவுளின் சாபத்திற்கு முதலமைச்சர் ஆளாகி விட்டார் அது மட்டும் நிச்சயம். அதற்கான தண்டனையை அனுபவிப்பார்
மேல்முறையீடு போகட்டும் அப்போ தான் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை மாதிரி ஒரு முடிவுக்கு வரும்.கால தாமதம் ஆனாலும் சாதகமான நல்ல தீர்ப்பு வரும். contempt of the court ஆகி ஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படும். நீட் தேர்வுக்கு பொய் அடி பட்ட மாதிரி இந்த விசயத்துல நடக்கட்டும்.
ஆப்கானின் சிக்கந்தர் சமாதி அகற்றுவதற்கு மேல் முறையீடு செய்வோம். இவனுக்கு மதுரை கோரிபாலயத்தில் ஒரு சமாதி இருக்கிறது. இதில் எது ஒரிஜினல் என்பதை விசாரணை கேட்போம். சமாதி மலை மேல் புதைப்பார்களா? மத கலவரம் உருவாக்கவே அதை மலை மேல் வைத்திருக்கிறார்கள் திராவிடர்கள்
இந்த திராவிட விடியல் கும்பல்கள் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும். தமிழக மக்களுக்கு திருந்த வேண்டும்.
The one who makes such statements deserves a a very mean cheap treatment from all sensible public minds.
He should lose deposit in the next asembly election!
மக்கள் வரிப்பணத்திலிருந்து வக்கீல்களுக்கு பணம் விரயம் செய்யுஙகள். உங்கள் பணம் இல்லையே,,makkal வரிப்பணம் தானே...
திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்வோம் சொல்கிறார் அமைச்சர் ரகுபதி இவர் என்னசட்ட அமைச்சரா அல்லது சாட்டை அமைச்சரா என்றே தெரியவில்லை இன்னும் மக்கள் பணத்தை விரயமாக்க வில்சன் என்பவரை வைத்து கபில் சிபலுக்கு பத்துநிலட்சம் மக்கள் பணத்தை கொடுத்து வீம்புக்காக விரயமாக்குவார்கள் அதை மக்களே உடனே தடுக்க வேண்டும் அங்கேயும் தோவியைத்தான் கிட்டுவார்கள்