கர்நாடகாவில் நீண்ட கால முதல்வர்: சித்தராமையா சாதனை
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, இன்று (ஜனவரி 6) மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், சாதனையைச் சமன் செய்தார். கர்நாடகாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய முதல்வர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
கர்நாடகாவில் மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் இரண்டு முறை மொத்தம் 2,792 நாட்கள்(7 ஆண்டுகள் 239 நாட்கள்) முதல்வராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா இன்று இந்தச் சாதனையைச் சமன் செய்து, நாளை அதை முறியடிக்கிறார்.
சித்தராமையா தனது முதல் பதவிக்காலத்தில் (2013-2018) 1,829 நாட்கள் பணியாற்றினார். மே 20, 2023 அன்று இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற அவர், தற்போது அந்தச் சாதனையை நோக்கி செல்கிறார்.
சித்தராமையா கர்நாடக வரலாற்றில் இதுவரை 16 முறை மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார், இதுவும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் சித்தராமையா கூறியதாவது:
"நான் எந்தச் சாதனையும் படைப்பதற்காக அரசியல் செய்யவில்லை; இது மக்களின் ஆசீர்வாதத்தால் நேர்ந்த ஒரு தற்செயலான நிகழ்வு" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தச் சாதனையை முன்னிட்டு கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இது ஒரு வேதனை. வேறு கெட்டிக்காரர் காங்கிரசில் இல்லை என்பதை இப்போதாவது ராகுல் ஒப்பு கொள்கிறாரா?
சித்தராமையா கொடுத்த அல்வாவை சாப்பிட்ட டி கே சிவகுமாருக்கு வயிற்றெரிச்சல் ......
சிவக்குமார் வீணாப்போன் ராகுல் காரை கட்டிக்கொண்டு அழுதார். ராகுல் கான் போன் இடத்துக்கெல்லாம் போனார். ஈவன் ராகுல் கான் அமேரிக்கா போன் போது அடுத்த பிளேனை பிடித்து இவரும் போனார். நீரை எடுத்து நெருப்பை அணைக்க முடியல. ராகுல்கான் வீணாப்போனவன் னு இப்ப தெரிஞ்சிருக்குமே. இப்போ எல்லை மீறி போய்ட்டுது. இனிமே எது தெரிஞ்சாலும் பிரயோஜனமில்லை. வரும் எலக்ஷனில் காங்கிரஸ் ஐ விட்டுட்டு சித்துவை எதிர்த்து நின்னா முதல்வராகும் சான்ஸ் இருக்கலாம்.
போ போ காற்று வரட்டும் என்கிறார் சிவக்குமார்மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்