மாணவி குறித்து சமுகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி முதல்வர், கணவர் கைது
திருநெல்வேலி: மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, அந்த மாணவி கடந்த டிச.,1ல் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதா( தற்போதைய கல்லூரி முதல்வர்) சமுகவலைதள பக்கத்தில் இருந்தே அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.
மாணவியின் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கல்லூரி முதல்வர் சுமிதாவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் அவரது கணவர் பொன்னுதுரையுமே அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் இன்று காலை முதல் விசாரணை நடத்தினர். எட்டு மணி நேர விசாரணைக்கு பிறகு இருவரையும் கைது செய்தனர். பிறகு, சொந்த ஜாமினில் இருவரையும் விடுவித்தனர்.
படித்தும் வன்மம் போகவில்லை. மிருக ஜென்மமமோ?
ஜெயிலில் கலி தின்னது போல் சொல்லுகிறீர்கள். ஜாதகப்படி கைது நடவடிக்கை தேவை அதனால் இந்த நிகழ்வு. இனி சாப்பிடலாம் தூங்கலாம். மானைவி தூங்கமுடியுமா என தெரியவில்லை. சமாதானம் ஆகிவிட்டு வேலையை பாருங்கள்.
மாணவியின் எதிர் காலத்திற்கு என்ன உத்திரவாதம்?
These unscrupulous elements should be punished severely. This is an serious attempt to assasinate the acter of a female student.
மாணவி குறித்து சமுகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி முதல்வர், கணவர் கைது. ஒன்றும் நடக்காது .மாணவி பாடு தான் திண்டாட்டம் .மாணவியின் படிப்பை தடை செய்ய முயற்சிகள் தொடரும் ..மத்திய ,மாநில கல்வி அமைச்சகம் ,யுஜிசி , பல்கலைக்கழகம் யாவுமே இது குறித்த புரிதல்கள் இல்லாமலே உள்ளன .அனுதாபங்கள் ஆன்லைன் குறைதீர்ப்பு எனபது ஒரு சம்பிரதாயமான ஒன்றாக போய் பிரச்சனையை முடிக்க உதவவில்லை .முடிந்தால் யுஜிசி வெப்சைட் சென்று பாருங்கள் இந்த கேலிக்கூத்தை .மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை