இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்



நாமக்கல்: பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே, 2057வது திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்-பட்டது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.


செயலாளர் ரகோத்தமன் வரவேற்றார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், திருவள்ளுவர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அனைவருக்கும் 'நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பாடல்கள்' அடங்கிய புத்தங்கங்களை வழங்கினார். அப்போது, 'நாமக்கல் நகரில் திரு-வள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான முழு முயற்சியும் மேற்-கொள்கிறேன். மேலும், அறக்கட்டளை அமைக்-கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருக்-குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சேலம் மண்டல தலைவர் உழவன் தங்கவேலு பரிசு மற்றும் சான்-றிதழ் வழங்கினார். பேரவை பொருளாளர் மதிய-ழகன், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


* திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில், மோகனுார் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்-பள்ளி, டவுன் பஞ்., அலுவலகத்தில், திருவள்-ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. அறக்-கட்ளை தலைவர் விஸ்வநாதன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் மோகநாதன் உள்-ளிட்டோர் பங்கேற்று, வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement