தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ப.வேலுார்: தை மாத பிரதோஷத்தையொட்டி, ப.வேலுார் எல்லையம்மன் கோவிலில், 400 ஆண்டு பழமை-யான ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபி-ஷேகம் நடந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திரு-நீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவிலில் உள்ள நந்தி பக-வானுக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்கார வழி-பாடு நடந்தது. அதன்பின், ஏகாம்பர ஈஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்-டது.
இதேபோல், ப.வேலுா ரில் உள்ள காசி விஸ்வ-நாதர் கோவில், பாண்டமங்கலம் புதியகாசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்-வரர் கோவில், பில்லுார் விரட்டீஸ்வரர் கோவில், பொத்தனுார் காசி விஸ்வநாதர் கோவில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்-ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிவ-னுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபி-ஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், கைலாசநாதர் மற்றும் நந்திபகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.