பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 15 வயது சிறுவன் சிக்கினான்
சண்டிகர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை பஞ்சாப் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்தியா குறித்து தகவல்கள் பாகிஸ்தானுக்கு பரிமாறப்பட்டு வருவதாக உளவுத்துறையினர் அளித்த தகவலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை, பஞ்சாப் மாநிலம் மதோபூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அந்தச் சிறுவனிடம் இருந்த மொபைல்போனை பறித்து ஆய்வு செய்ததில் முக்கியமான தகவல்கள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தான் ராணுவத்திடம் பரிமாறிக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும்,இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு அளித்துள்ளதுடன், போதை மருந்து கடத்தல்காரனுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பதன்கோட் எஸ்எஸ்பி தில்ஜிந்தர் சிங் தில்லான் கூறியதாவது: இந்த சிறுவன், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத குழுக்களுடன் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்பில் உள்ளான்.தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிகுந்த இவன், முக்கியமான தகவல்களை பரிமாறிக்கொண்டு உள்ளான். இவன் பிடிபடாமல் இருந்திருந்தால்,பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பான் எனக்கூறியுள்ளார்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களின் வலையில் இன்னும் சில சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சுட்டு தள்ள வேண்டும்
இவனுக்கு சொர்க்கம் இங்க டுமீல் நாடு அல்லது பீவி நாடு.
சிறுவன் என்பதால் சந்தேகப்பட மாட்டார்கள் என்று ஐஎஸ்ஐ நினைத்திருக்கலாம் .... அவன் முதிர்ச்சிக்கு ஏற்ப தகவல்களைத் திரட்டித்தர அவனுக்கு குறைந்த பட்ச பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கலாம் ....
விஷ மரம்தான் ஆபத்தானது என்றில்லை ...... விஷச்செடியும், ஏன் விஷ வித்தும் கூட ஆபத்தானதே ..... தயக்கமின்றி அழிக்கப்படவேண்டும் ..... கூர்நோக்கு இல்லம் என்ற பெயரில் நீர் வார்த்து, உரமிடக்கூடாது ......
நிர்பயா வழக்கில் செய்ததுபோல இவனும் 15 வயது சிறுவன் கூர்நோக்கு பள்ளியில் 3 வருஷம் சேர்த்துவிட்டு பின் ஒரு தையல் இயந்திரம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புங்கள். அஹா என்ன அருமையான சட்டம்.மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது