இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
பாரிஸ்: கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரானும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என தெரிவித்திருந்தார். தற்போது, 2026ம் ஆண்டு பிப்.1 முதல் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 8 நாடுகளுக்கு 10 சதவீதம் புதிய இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த முடிவிற்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரானும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் உள்ள நாடுகளின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளது. இதுவே எங்கள் முடிவுகளுக்கு வழிகாட்டுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் சாசனத்திற்கும் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு அடிப்படையாக அமைகிறது. இந்த அடிப்படையில்தான் நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம், தொடர்ந்து ஆதரிப்போம்.
இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சியில் பங்கேற்கவும் நாங்கள் முடிவு செய்தோம். இந்த முடிவை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் ஆர்க்டிக் பகுதியிலும் நமது ஐரோப்பாவின் வெளி எல்லைகளிலும் உள்ள பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகில் வேறு எங்குமே இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ளும்போது, எந்தவொரு மிரட்டலோ அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது. வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. அவை உறுதிப்படுத்தப்பட்டால், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள். ஐரோப்பிய இறையாண்மை நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
அதேபோல், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அதிபர் டிரம்பின் நோக்கத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டியது முற்றிலும் தவறு. நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பைப் பின்தொடர்வதற்காக நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பியர்கள் இவ்வளவு நாட்களாக மற்றவர்களின் பிரச்சினையை வரி தக்காளி சட்டினி என்று நினைத்து கொண்டு இருந்தார்கள். இப்போது அவர்களுக்கு வரி விதித்த போது தான் அது ரத்தம் என்று தெரிந்து இருக்கிறது. அனுபவி ராஜா அனுபவி.
இன்னும் காலணி ஆதிக்க மனநிலையிலேயே இருக்கும் உங்களுக்கு உங்களுடைய மருந்தே கொடுக்கப்படுகிறது தன் விணை தன்னையே சுடும். . தமிழ்நாட்டிலும் இது விரைவில் நடக்க இருக்கிறது.
டிரம்ப்பின் வரி பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் செய்யவேண்டும். அந்த வரிப்பயித்தியத்துக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும்.
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் உண்மையில் அமெரிக்கர் அல்ல! அவர் ஒரு ஒரிஜினல் ஐரோப்பியர். அவரது தாத்தா Frederick Trump என்பவர் ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர். மேலும் அவரை ஏதோ ஒரு காரணத்திற்காக (முன்பு படித்தது சரியாக நினைவில் இல்லை) ஜெர்மனி அவரை தன்னுடைய நாட்டிலிருந்து வெளியேற்றியது அதன் பிறகு அவர் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறினார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு அரசாங்க பயணம் மேற்கொண்ட ஜெர்மன் பிரதமர் ஃபிரட்ரிக் மெர்ஸ், பெரிய அளவில் லேமினேஷன் செய்யப் பட்ட டிரம்பின் தாத்தாவின் ஜெர்மானிய பிறந்த நாள் சான்றிதழை (Birth Certificate) The Washington post, மற்றும் NYT, Readers Digest, BBC போன்ற பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் அதை அதிபர் டிரம்பிற்கு பரிசளித்தார். அப்போது ட்ரம்ப்பின் மூஞ்சி போன போக்கை பார்க்க வேண்டுமே!
இப்போது உள்ள மொத்த அமெரிக்க மக்களில் 1% தான் ஒரிஜினல் அமெரிக்கர். மீதம் உள்ள எல்லாரும் மற்ற கண்டங்களில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் தான். பெரும்பான்மையான பூர்வ குடி அமெரிக்கர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள்.
அப்போது நாம் நினைத்தது மிகவும் சரியாக உள்ளது..ஐயா டிரம்ப், நாஜி ஜெர்மனியின் அமெரிக்க வெர்ஷன் போல... ஐரோப்பாவுக்கு அவர்களின் பூர்வ கர்மா திருப்பி அடிக்கிறது...
ட்ரம்பின் தாத்தா 1886ல் கட்டாய ராணுவ பயிற்சியை தவிர்க்கும் பொருட்டே அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார்.. ஆனால் அப்படி ஓடியதை பவேரிய அரசுக்கு தெரிவிக்கவில்லை.. அந்த நாட்டு சட்டப்படி இந்த இரண்டு குற்றங்களுக்காக ராணுவத்தை தவிர்த்தது, இன்னொரு நாட்டுக்கு ஓடியதை சொல்லாமல் விட்டது, 1905ல் அவரை நாட்டிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்கள்
டிரம்ப் இந்த சண்டியர் தனம் கண்டிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்.
இந்த கிருஸ்தவ நாடுகள் ஒரு காலத்தில் தன் காலனி நாடுகளை கொள்ளை அடித்து சுரண்டி சாப்பிட்டு அந்த நாடுகளில் மதமாற்ற செய்து மதமாரிகளை தன் ஏஜண்டாக பயன்படுத்திக் கொண்டனர். இப்போது இன்னொரு கிருஸ்தவ நாடான அமெரிக்கா இவர்களுக்கு ஆப்பு வைக்கிறது வினை விதைத்தவன் வினை அறுப்பான். நாம் நமது நாட்டுக்கு தேவையானதை மட்டும் செய்ய வேண்டும் இந்த ஐரோப்பிய அமெரிக்கா ஆஸ்திரேலிய கனடா போன்ற நாடுகளை பற்றி கவலை பட தேவையில்லை.
ஸ்டாலின் BJP உள்ளே வந்து விடும்னு சொல்றமாதிரி ட்ரம்ப் சீனா உள்ளே வந்து விடும்னு சொல்லுகிறார்
தற்போதைய ஐரோப்பியர்கள் முதுகெலும்பு அற்றவர்கள்
பிரெஞ்சு அதிபர் மேக்ரானுடன் டிரம்ப் கடுமையாகப் பேரம் பேசினார். திங்கட்கிழமைக்குள் நாங்கள் விரும்பும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், பிரான்சிலிருந்து ஏற்றுமதியாகும் ஒவ்வொரு பொருளுக்கும் நான் 25% வரி விதிப்பேன் என்றார். அதற்கு மேக்ரான் உங்களால் அப்படிச் செய்ய முடியாது என்று பம்மினார். தேசியப் பாதுகாப்புக்காக நான்
அதைச் செய்வேன் என்று வெளிப்படையாகவே டிரம்ப் மேக்ரானை மிரட்டினார். 80 ஆண்டுகால பிரெஞ்சு நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்றுதான் இதை அழைக்க வேண்டும். டிரம்ப் முன்பு இதேபோல் இந்தியாவை கேலி செய்து மிரட்டியதை விட இது மிகவும் மோசமானது. இதையே முன்பு காங்கிரஸார் மோடி மற்றும் ஜெய்சங்கரின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று கூறி ஆனந்தக் கூத்தாடினார்களே இப்போது அவர்கள் தங்கள் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?
கூடா நட்பு கேடாய்விளையும் என்று முன்னமே புரிந்துகொண்டார்கள். நன்றி.மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்