ஆட்சியில் பங்கு கேட்பது ஏன்? தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் பதில்
சென்னை: 'சட்டசபை தேர்தல் என்பதால்தான் ஆட்சியில் பங்கு கேட்கிறோம்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமா அல்லது வெளியேறுமா என்ற குழப்பம் உருவாகி உள்ளது. தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், 41 தொகுதிகள், மூன்று அமைச்சர்கள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என, காங்கிரஸ் டில்லி மேலிடம் கறார் காட்டி வருகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., உடன் கூட்டணி அமைக்கவும், காங்கிரஸ் ரகசிய பேச்சு நடத்தி வருகிறது. ராகுலுக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை சந்தித்து பேசினார். அத்துடன், தமிழக அரசை விமர்சித்தும், உ.பி., அரசுடன் ஒப்பிட்டும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். 'கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது' என்ற கருத்தை வெளியிட்டார்.
இதற்கு பதில் அளித்த தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'காங்கிரசில் இருந்து யார் பேசினாலும், தி.மு.க.,வில் இருந்து யார் பேசினாலும் அது தனிப்பட்ட கருத்துதான். லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது என்பதால் மாணிக்கம் தாகூர் பேசுகிறார். எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும் இது போன்று பேசவில்லை. கடந்த 2019ம் ஆண்டு பார்முலாவின்படி நாங்கள் நடக்கிறோம். இந்த தேர்தலிலும் இரு சகோதரர்கள் எடுக்கும் முடிவுதான். எதுவென்றாலும், அது முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் இறுதி முடிவு எடுப்பர்' என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார் பேசிய பதிவுகளை, மாணிக்கம் தாகூர் தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 'லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது.
ஆட்சியில் பங்கு குறித்து எம்.எல்.ஏ., யாரும் கேட்கவில்லை என்பது சரியான கூற்று அல்ல. லோக்சபா தேர்தலில், மாநில ஆட்சியில் பங்கு கேட்பது பொருத்தமற்றது. பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்வி கேட்பது போல் உள்ளது. சட்டசபை தேர்தல் என்பதால் தான், ராஜேஷ்குமார் போன்றோர் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்' எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரை தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.
கொத்தடிமை வேலை பார்க்கத்தான்.
இந்துக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு வரும் இந்திக்கூட்டணிக்கும் காங்கிரசுக்கும் இனி வடக்கே வருங்காலம் கிடையாது - ஆகவே தமிழகம்தான் இனி காங்கிரசின் ஆடுகளம். காங்கிரசை ஒழித்துக்கட்ட தீம்க்கா அமைத்த வியூகம் என்று கூட கருதலாம்.
திமுகவை மிரட்டி, காங்கிரஸ் நூறு தொகுதிகள் பெறுவது பிஜேபி ஜெயிப்பதற்கு வசதியாக இருக்கும்.
எல்லாம் வாய்சவடால்ங்க ... 30 தொகுதி கம்முன்னு வாங்கீட்டு நவதுவாரங்களையும் க்ளோஸ் செஞ்சிட்டு போயிடுவானுவ .. சும்மா பிம்பிளிக்கு பிம்பிலிக்கா
சட்டசபை தேர்தல் என்பதால்தான் ஆட்சியில் பங்கு கேட்கிறோம் ???? அப்போ மக்களவைத் தேர்தலில் நீங்க பங்கு கேட்க மாட்டீங்க ???? தேசியக்கட்சி என்பதையே மறந்துவிட்டு இவ்வளவு தாழ்ந்துட்டீங்களே ????
தேசிய கட்சியா ?? எப்பொ
சீக்கிரம் அடிச்சிட்டு சாவுக... எப்படியும் தோற்று ஓடும் கூட்டணியில் எதுவும் இல்லை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே இல்லை என்று சங்க இலக்கிய சித்தர் கல்வெட்டில் கட்டுப்பாடு உள்ளது என்று திமுக, அதிமுக உருட்டினாலும் உருட்டுவார்கள்
The Congress party shown the middle finger to DMK party.
அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்ன்னு பாஜகவை கூட்டணியில் இருந்து விரட்டியோ, பாஜாக கூட்டணியில் இருந்து கழன்றோ ஓட தத்தளிக்கிறார் பழனிசாமி. அதை தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் அமீத் சாவை சந்திக்காமல் அவமரியாதை செய்தும் பாஜக அதிமுகவை பிடித்து தொங்குகிறது.
முதுகுஎலும்பு இல்லாத காங்கிரஸ். வாய் சௌடால் congress
பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்வி கேட்பது போல் உள்ளது. என்று ஆர் எஸ் பாரதி கூறியது முற்றிலும் உண்மைதான் ஏனென்றால் இவர்கள் திராவிட மாடல் அரசு அரசாண்மைக்கு புறம்பாகவே எல்லாவற்றிலும் நடந்து கொள்கிறது கேட்பதற்கு ஆளே இல்லையா நீதி இங்கே செத்துவிட்டது நீதிக்கு புறம்பானவைகள்தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன அதற்கு தகுந்த பாடம்தான் இந்த ஆட்சியில் பங்கு என்பது