நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
@quote@ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மனமில்லாமல், 'சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது' என, தி.மு.க., அமைச்சர் அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மிக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதல்வர் உட்பட தி.மு.க.,வினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், தி.மு.க., அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் தி.மு.க.,வினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கலாமா? நாவடக்கம் இன்றித் திரியும் தி.மு.க.,வினருக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர்.
- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,quote
மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை