கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., அரசும், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியதால் கடுப்பான நீதிபதி, வழக்கை வரும் 14க்கு ஒத்திவைத்து நீதிமன்ற அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து இங்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
சோதனை
ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, 'ஐ - பேக்' நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து தருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின், திரிணமுல் காங்., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராகவும் உள்ளார்.
மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பாக, 2020ல் சி.பி.ஐ., வழக்குப் பதிந்தது. இதில் பெறப்பட்ட பணம் சட்ட விரோதமாக, ஐ - பேக் நிறுவனத்துக்கு கைமாறியதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கொல்கட்டாவில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அதே போல, அந்நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இதை அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, போலீஸ் உயரதிகாரிகள் புடைசூழ, பிரதீக் ஜெயின் வீட்டுக்கு வந்து சில முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றார்.
இதை பார்த்த அமலாக்கத் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சோதனையில் குறுக்கிட்டதோடு, ஆவணங்களை முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றது தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி - அமலாக்கத் துறையினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில், ஐ- - பேக் அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் வீட்டில் நடந்த சோதனையை முதல்வர் மம்தா பானர்ஜி குறுக்கிட்டு தடுத்ததாகவும், அவர் மீது வழக்குப் பதிந்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரியும், கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.
பிரதீக் ஜெயின் வீட்டில் நடந்த சோதனையின் போது அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி, ஆளும் திரிணமுல் காங்., உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த இரு வழக்குகளும், கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி சுவ்ரா கோஷ் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிமன்ற அறையில் இருந்த திரிணமுல் காங்., வழக்கறிஞர்கள் - அமலாக்கத் துறை வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த நீதிபதி சுவ்ரா கோஷ், அமைதி காக்கும்படி இரு தரப்பையும் கேட்டுக் கொண்டார்.
எச்சரிக்கை
இதை மதிக்காமல் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நீதிமன்ற அறையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, “இந்த வழக்குகளுடன் தொடர்பு இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறையை விட்டு ஐந்து நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும். இல்லை எனில், நான் வெளியேற வேண்டியிருக்கும்,” என, நீதிபதி சுவ்ரா கோஷ் எச்சரித்தார்.
எனினும், யார் உள்ளே இருப்பது, வெளியேறுவது குறித்து வழக்கறிஞர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. கடுப்பான நீதிபதி சுவ்ரா கோஷ், வழக்கை வரும் 14க்கு ஒத்திவைத்து, அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, அமலாக்கத் துறையை கண்டித்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கட்டாவில் மாபெரும் பேரணி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
@block_B@
ஐ - பேக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து, தலைநகர் டில்லியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வீட்டை முற்றுகையிட்டு, திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் மஹுவா மொய்த்ரா, டெரக் ஓ பிரையன், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், விசாரணை அமைப்புகளை பா.ஜ., தவறாக பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.,க்களை, டில்லி போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.block_B
ஊழல் அரசியல் கட்சிகள், தலைவர்கள் பல்வேறு வகையான ஊழல்களை தடுக்கவும் விசாரிக்கவும் அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை அவமதிக்கும் போக்கு மாநில அரசுகளின் ஊழல்களில் சிக்கும் முதல்வர்கள் செய்கின்றனர். அரசியல் சட்டத்தை மீறுவது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய குற்றமாக்க வேண்டும்.
யாருக்கு நட்டம்???
கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய நாகரீகம் அற்ற சட்டத்துறையின் லக்ஷ்ணம் இதுதான்
இப்படி ஒன்று நமக்குத் தேவையா? வெள்ளையன் வரும் முன் இந்த நாட்டில் நீதி முறை என்று ஒன்று இருந்ததே இல்லையா.... நமக்கு வெட்கம் சூடு சொரணை இல்லையா.... அவைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு இன்னமும் வரக்கூடாதா... ஏன் இந்த வீண் வேலைகள் எல்லாம்....
இந்தியாவில் இனி நீதித்துறைக்கு வேலை இல்லை. அந்தந்த மாகாணத்தில் உள்ள நீதித்துறை அங்கு உள்ள அரசுக்கு ஏற்றவாறு நீதி அளிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீதிமன்னறை அரசு நடத்தும் கட்சிகள் அழித்து விடும்
அப்படியா அப்போ ப ஜ க அரசு இப்போது அதை தானே செய்கிறது உனக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சாஸ் தானே?
பாஜக வால் சமாளிக்க முடியவில்லை.
அமித் பாயின் ஏவல் அமலாக்கத்துறைக்கு ஈடு மம்தா தீதி மட்டுமே.
ஆம் அமித்ஷா கும்பலுக்கு கடிவாளம் போட தீதி மால் மட்டுமே முடியும்
பைல் & டாக்குமெண்ட் களவாணி மம்தா
மோடி அமித்ஷா கூடிய விரைவில் துண்டை கானொம் துடைப்பத்தை காணொம் என்று இந்தியாவை விட்டு ஓட போகிறார்கள்
மோடியும் அமிட்சாவும் தேச அபிமானிகள் - வேண்டுமானால் நீ பாகிஸ்தானுக்கு ஓடு தம்பி
கெட் அவுட்
How ED can enter to the political Strategist of TMC and take away all the TMC election strategy data. This is the way BJP will try to win elections. No body, who believe in democracy can support ED action.
பாஜக அரசை எதிர்த்து திமுக என்னதான் கொக்கரித்தாலும் பார்க்க வேண்டியவர்களை பார்த்து வழக்கு ஆபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள் ..... திலகமிடாத இந்த மூருக்கப் பெண்மணி பற்றித் தெரியவில்லை ....மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்