கோழி, ஆடுகளுக்கு எல்லாம் உயிர் இல்லையா? தெருநாய்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி: "பிற விலங்குகளுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா?" என்று தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. இதில், நாய் வளர்ப்பவர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒரு தரப்பினராகவும், தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி மனு தாக்கல் செய்தவர்கள் மற்றொரு தரப்பினராகவும் ஆஜராகி வாதமிட்டு வருகின்றனர்.
அனைத்து தெருநாய்களையும் பிடித்து அடைக்கும் நிலை ஏற்பட்டால், குப்பை கழிவுகள் மற்றும் குரங்குகளை விரட்டுவது கேள்விக்குறியாகி விடும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
அதேவேளையில், தெருநாயால் பாதிக்கப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் தந்தை தரப்பில், "தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நொய்டா அதிகாரிகள் தவறி விட்டனர். குடியிருப்பாளர்கள் நலச்சங்கத்தினர் தங்கள் பகுதிகளில் தெருநாய்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என்றார்.
அப்போது, விலங்குகள் நலஆர்வலர்களுக்கு ஆதரவாக வாதிட்ட மூத்த வக்கீல் கபில் சிபல், "நாங்கள் தெருநாய்களின் பிரியர்களாகவும், பாதுகாப்பான சுற்றுச்சூழலை விரும்புபவர்களாகவும் இங்கு வந்துள்ளோம்," என்றார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், "பிற விலங்குகளின் உயிர்களின் நிலை என்ன? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா?. சாலைகளில் தெருநாய்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். நாய்கள் கடிக்காமல் இருக்கலாம், ஆனால், அதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே நாய்கள் இருப்பதால் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினர்.
வாசகர் கருத்து (25)
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07 ஜன,2026 - 22:11 Report Abuse
சோறுகண்டயிடம் சொர்க்கம் என்பதுபோல் கபில் சிபிலுக்கு விவஸ்தை கிடையாது. 0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
07 ஜன,2026 - 22:00 Report Abuse
எலிகளுக்கு பயந்து வீட்டை எரிக்க சொல்கிறார்கள் போல. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 ஜன,2026 - 19:07 Report Abuse
நாய்ப்பிரியர்கள், உண்மையில் நாயின் மீது பற்று இருந்தால், தெருவில் போவோர் வருவோருக்கு ஆபத்தாக திரியும் தெருநாய்களை பிடித்து அவர்கள் வீட்டுக்குள்ளே வளர்க்கட்டும், including கபில் சிபல். 0
0
Selvaraj Shenbagaraj - Tuticorin(Thoothukudi),இந்தியா
08 ஜன,2026 - 07:21Report Abuse
நிதர்சனமான உண்மை 0
0
Reply
Thirumal Kumaresan - singapore,இந்தியா
07 ஜன,2026 - 18:36 Report Abuse
தெரு நாய்கள் மட்டும் இல்லை மனிதனின் நியாயமான வாழ்வுக்கு இடன்சலான விலங்குகளை கட்டுபடுத்த வேண்டும், விலங்கு ஆர்வலர்கள் 100 ஏக்கர் நிலம் வாங்கி அவர்களுக்கு தேவையானதை வளர்த்து கொள்ளலாம். 0
0
Reply
Techzone Coimbatore - ,இந்தியா
07 ஜன,2026 - 18:32 Report Abuse
உச்சநீதிமன்றம் கோழி ஆடு மேல் அக்கறை இருந்தால் கசாப்பு கடைகளையும், அசைவ உணவையும் தடை செய்ய வேண்டும்.
இதனால் மனிதன் மிருகமாய் மாறுவது தடுக்கப்படும் 0
0
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07 ஜன,2026 - 22:07Report Abuse
நாய் ஆர்வலர்கள் போல் கோழி ஆடு ஆர்வலர்கள் செய்ய வேண்டிய வேலை. நீதிபதியும் நீதிமன்றங்களும் அல்ல. 0
0
Reply
Techzone Coimbatore - ,இந்தியா
07 ஜன,2026 - 18:30 Report Abuse
இந்த பூமி நாசமாய் போகிறது அதற்கு ஒரே காரணம் மனித இனம். இன்றைய மனித சமுதாயம் வெறும் பணத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனால் தான் டாஸ்மாக் பணம் கொழிக்கும், பாலியல் சம்பவங்கள், இயற்கை சீரழிப்பு, பொறுப்பற்ற விபத்துகள், உணவு கலப்படம் இன்னும் பல குற்றங்கள். மனித இனம் மட்டும் அழிந்து விட்டால் இந்த பூமியும், மற்ற உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கும்
சில உதாரணங்கள்
விஜய் பிரசாரத்தில் ஒரே இரவில் 41 பேர் இறந்தனர்
கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் மேல் இறந்தனர்
மதுவால் பல குடும்பங்கள் நாசமாய் போகிறது, அதனால் பல குற்றங்கள் நடக்கிறது.
மனிதனுக்கு தவிர மற்ற எல்லா உயிரினங்களும் இயற்கையாகவே நோய்களை சரி செய்யும் அறிவு உள்ளது, ஆறறிவு உள்ள மற்ற உயிரினங்களை விட மேலானவன் என்ற கர்வம் உள்ளவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது 0
0
Reply
Apposthalan samlin - sulaymaniyah,இந்தியா
07 ஜன,2026 - 17:35 Report Abuse
நாய்கள் கால்நடைகள் மூலமும் அதிக விபத்து நடக்கிறது கட்டு படுத்த வேண்டும் 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
07 ஜன,2026 - 17:23 Report Abuse
இது ஒரு tool kit லுங்கிக்கு நாய் என்றால் பிடிக்காது அதை கொள்ளவே இப்புடி ஒரு நாடகம் அப்புடி இருந்தால் அவைகளை பிடித்து காட்டில் விட்டு விடலாம் கொல்ல வேண்டாம் பசி கொடுமையில் கெட்டு போன உணவை தின்று விடுகிறது போதை தலைக்கு ஏறி கடிக்கிறது 0
0
Reply
Ganesh nathan - ,இந்தியா
07 ஜன,2026 - 17:23 Report Abuse
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தவுடன் அவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களை நீதிமன்ற வளாகத்திலேயே அடித்த நாய் வெறியர்கள் திருந்தப்போவதில்லை. வெறிநாய்கள் நிறைந்த தெருவில் நடக்க விட வேண்டும். 0
0
Reply
மணியன் - ,
07 ஜன,2026 - 15:35 Report Abuse
கபில் எல்லாம் ஒரு மனுஷனா. 0
0
Reply
மேலும் 13 கருத்துக்கள்...
மேலும்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
Advertisement
Advertisement