அன்புமணியுடனான கூட்டணி வெற்றிக்கான அச்சாரம்; இபிஎஸ் மகிழ்ச்சி
சென்னை; சட்டசபை தேர்தலில் அன்புமணியுடனான கூட்டணி வெற்றிக்கான அச்சாரம் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் தவெகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந் நிலையில் பாமக தலைவர் அன்புமணி, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சை சந்தித்தார். பின்னர் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக இபிஎஸ் அறிவித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;
அதிமுக - பாஜ வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாமகவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி. அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், அன்புமணியும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்.
மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அதிமுக நல்லாட்சியினை அமைப்போம்.
இவ்வாறு தமது பதிவில் இபிஎஸ் கூறி உள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு கிடைத்தது மாம்பழம் அல்ல, மாம்பழத்தின் சப்பிப் போட்ட கொட்டை மட்டுமே!
வீணா போன வேணு
..அங்கே காங்கிரஸ் தவெக சேர்ந்தால் அந்த கொட்டை கூட உனக்கு கிடைக்காது
சிறுத்தை போல் பாட்டாளி ஒரு சாதி கட்சி. உள்கட்சி பிளவு உச்சம். அன்பு மணி வரவு பயன் தராது. எடப்பாடி முதல்வரானால், பிஜேபி அதிகம் பாதிப்பு அடையும், காரணம் பல துறைகளில் திமுக நிர்வாக சீர்கேடு உச்சம். எடப்பாடி வலுவான நடவடிக்கை எடுக்க முடியாது. முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை, செங்கோட்டையன், ஜி.கே. வாசன் தேர்வு மூலம் பிஜேபி பயனடையும். பிஜேபி, அண்ணா திமுக வென்றால் துணை முதல்வர்..எடப்பாடி, அன்புமணி, பன்னீர் கோஷ்டி உடன் ஊழல் விரும்பாத தேச பக்தி கட்சி தன் முழு அதிகாரம் கீழ் கொண்டுவர வேண்டும்.
இப்ப வேற வழி இல்லாமல் ராமதாஸ் திமுகவிடம் தான் செல்வார், வெல்வார்!
அதிமுகவை தன் வசம் கொண்டு வந்தவரும் பாமகாவை தன் வசம் கொண்டு வந்தவரும் இனைவது பொருத்தமாக இருக்கும்,இதை ராமதாஸ்வும் அவர்களும் சசிகலா அவர்களும் தான் பாராட்ட வேண்டும் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
சிகைமுடியை கழட்டிடுவாங்க போல இருக்கே ?
பல்கா பெட்டி கைமாறி இருக்கும். பெட்டி வாங்கியவுடன் அமைதியா இருப்பது.ஒரு 3% ஓட்டுக்குகே பெரிய ராமதாஸ் 2% கழித்து போகஎடப்பாடி குதூகலம் ஆயிட்டார். ரெண்டு திராவிட கட்சிகளோடது கூட்டணி கிடையாது என்று சொன்னதெல்லாம் தண்ணீரில்தான் எழுதிவைக்கவேண்டும். இதற்கு சீமான் எவ்வளவோ மேல்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் என் தாயுடன் சேர்வதற்கு சமம் - அன்புமணி
திமுக காங்கிரசின் பகைமையை விட வேறெந்த கட்சிகளும் பகைமை மேற்கொண்டதில்லை .... அவ்விரு கட்சிகளும் பல ஆண்டுகளாக இணைந்துள்ளன .... அதை விட வெட்கக்கேடு உண்டா >>>> சீமான் திமுகவின் ஒரு டீம் .... திமுகவுக்காக அதன் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க உழைப்பவர் .... அவர் திமுகவுடன் கூட்டணி எப்படி வைப்பார் >>>> அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கமாண்டரின் மாப்பிள்ளை பணப்பட்டுவாடா செய்ய மாட்டார் .... ஆகவே வாய்ப்பில்லை ....
நீ இப்போ எதுக்கு அழுது புலம்புறே?
நம்புங்கள் தமிழன் திராவிட சொம்புதான். அது அவன் கருத்தில் தெரிகிறது
ஏன் இப்போதே தோல்வி பயம் வந்து விட்டதா...... தமிழக இந்து மக்களும் இப்போது விழித்து கொண்டு விட்டார்கள்,.... அதனால் திமுக தலைமையிலான இண்டி கூட்டணிக்கு தோல்வி உறுதி.
தினகரனும், ஓபிஎஸ் ம் கூட சேர வாய்ப்பு ....... திமுக அலறல் .......
அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வடக்கு தமிழகத்திலும் சில மேற்கு மாவட்டங்களிலும் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தலாம், அதனால் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தெற்கில் அதிமுக தேய்ந்து இருக்கிறது. அதற்க்கு கை தூக்கி விட தினகரனுடன் கூட்டணி கட்டாயம் வேண்டும். இல்லையென்றால் கடந்த முறை சுமார் இருபத்தைந்து இடங்களில் அதிமுகவின் வெற்றியை பறித்தது போல இம்முறையும் விழித்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். இனி அனைவரிடம் சொல்ல வேண்டியது "திமுக உள்ளே வந்துவிடும்". ஹஹஹா
எல்லாவற்றையும் விட பயர் பிராண்ட் அதிரடி அண்ணாமலையை இறக்கினால் இளைஞர்கள் / படித்தவர்கள்/ அறிஞர்கள் / பண்பாளர்கள்/ நடுநிலைவாதிகள்/ ஆன்மீகவாதிகள் முக்கியமாக ரஜினி போன்றோர் ஆதரவு அமோகமாக இருக்கும் Annamalai effect will tilt and tide in favour of AIADMK & NDA to the forefront. 100%
அழுது புரண்டு ஓடிவா ஓவியமே
தோல்விக்கான அச்சாரம் ...
கைலாசபுர பாய்க்கு தூக்கம் போயிடுச்சு..நாளை மறுநாள் பிரேமலதா வேற எடப்பாடிய சந்திக்க போறாராம்...
கை கால் நடுங்காம கருத்து போடு கைலாசம்மேலும்
-
ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்