ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், கடந்த 9ல் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காததை அடுத்து, படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இதனால், திரைப்படத்தை தயாரித்த கே.வி.என்., நிறுவனம், உடனே, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவை, கடந்த 9ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, 'ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கள் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தது.
அன்றைய தினமே, இரு நீதிபதிகள் அமர்வில் அந்த மனு விசாரிக்கப்பட்டது. 'தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, விசாரணையை வரும் 21க்கு தள்ளி வைக்கிறோம்' என அறிவித்தனர்.
இதற்கு எதிராக, பட தயாரிப்பு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மாஷி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன., 9ல், படம் வெளியாகும் என, ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இந்தியா முழுவதும், 5,000 திரையரங்குகளில் படம் வெளியாக இருந்தது; டிக்கெட்டுகள் விற்பனையும் நடந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் திரைப்படத்தில் 10 காட்சிகளை நீக்கினால் தான், படத்திற்கான தணிக்கை சான்றிதழ் தரப்படும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது. எனவே, இதில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தை நீங்கள் அணுகி இருப்பது மிகவும் அதிவேகமான செயல்பாடு.
இந்த விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில்,வரும் வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள்?
அதோடு, படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை வாரியம் சொன்னபின், அதை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை.
அதனால், உங்கள் மனுவை விசாரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. எனவே, மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
-டில்லி சிறப்பு நிருபர்- .
விஜய் சார்.... ஒழுங்கா, பராசக்தி...ன்னு படம் எடுத்துட்டு... படத்தை ரீலிஸ் பண்ணிட்டு... தொபுக்கடீன்னு டெல்லியில் போய் கால்ல விழுந்த குரூப்.... மாதிரி, நீயும் அவங்க கால்ல விழுந்தா..
. உன் படமும் ஓடும்.. அரசியலிலும் நீ பிழைக்கலாம்...? இல்ல... செத்தாண்டா சேகர்.. கதைதான்..? ஆனானப்பட்ட கெஜ்ரிவால். ஹேமந்த் சோரன் ஆகியோரையே களி தின்ன வச்சிட்டாங்க...?
நீயெல்லாம் அவர்களுக்கு ஒரு தூசு... கால்தூசு... அதுனால், சரண்டர் ஆயிடு... இல்லென்னா, உன் கூட்டமே காணாமல் போயிடும்... “தம்பி... ஓடிடு..?”
விஜய் பட 10 காட்சிகள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் தணிக்கை வாரியம் நீக்க சொல்கிறது. அதனை நீக்கி வெளியிட என்ன தயக்கம்.? முன்பு போல் மூல கதை இருக்காது. வெறும் ஆட்டம், பாட்டம், அடிதடி. நீதிமன்றம் தணிக்கை வாரியம் பணியில் குறுக்கிடுவது சரியா? உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பது சரியே.
பகவந்த் கேசரின்னு போன வருடம் தெலுங்கில் தேசிய விருது வாங்கியது. அதனோட சீன் பை சீன் ரீமேக் தான் ஜனநாயகன். மத்திய அரசின் படத்தணிக்கை குழுவிற்கு அந்தப்படம் ஒரு தீங்கற்ற படமாக இருந்தது. அரசின் தேசிய விருது கொடுக்கும் அளவுக்கு சிறந்த படமாக இருந்தது. அது எப்படி?
ஜனநாயகனுக்கு பதிலாக தீவிரவாதி என்று பெயர் வைத்து இருக்கலாம். இந்தியை வைத்து அரசியல் செய்தவர்கள் இன்று தங்களது சன்ஷைன் பள்ளியில் ஹிந்தி பயிற்றுவிக்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்கிறார்கள். ஹிந்தி பிரச்சார சபா கூட இருக்கிறது. ஆக திராவிட அரக்கர்களின் ஹிந்தி வெறுப்பு அரசியலுக்கு பலியானது அப்பாவி அரசு பள்ளி மாணவன் மட்டுமே.
சீனுக்கு சீன் பகவந்த் கேசரி படத்தின் ஈயடிச்சான் காப்பி. அந்த படத்துக்கு போன வருடம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை கொடுத்தார்களே இப்போ திடீர் ஞானோதயமா? சொல்ற பொய்யை கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்க.
மரியாதையான வசவு.... உனக்கு திமுக..வை திட்டலேன்னா தூக்கம் வராது போலிருக்கே...
நீ வா போ போன்றது திராவிட நாகரீகத்தின் ஒரு பகுதி. சமூக வலைத்தளங்களில் அது ஆபாசமான வகையில் இருக்கும். கணேஷ் ஆங்கிறே போன்ற சிலர் திராவிடம் சொல்லும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
தணிக்கை வாரியத்தை வைத்து இளைய தளபதி விஜயை மிரட்டும் திமுகவை எதிர்த்து பாஜ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் அறிவிக்கப போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஒருநாள் திரையரங்குகளை மூடி எதிர்ப்பு தெரிவிக்கலாம் ..யூ டியூபிலும் face ஸ்புக் இன்ஸ்டாகிராமில் வரும் படங்கள் தணிக்கை ஆகாமல் எப்படி வருகின்றன ..சமீப காலத்தில் கெட்ட வார்த்தைகள் சரளமாக பேசப்படுகின்றன ..குச்சி மிட்டாய் கூட வாங்க முடியாது போன்ற வசனங்கள்
அந்த யூடியூப் படங்களை பார்த்தே ஆகணும்ன்னு யாராவது மெரட்டினாங்களா?மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது