ஈத்கா மைதானம் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு-சங்ககிரி ரோட்டில், திப்புசுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில், ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவது வழக்கம். இந்த ஈத்கா மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்-சுவர் இல்லாமல், தரைத்தளம் சரியில்லாத அமைப்பிலும் இருந்-தது. இந்நிலையில், ஈத்கா மைதானத்தை தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சீரமைத்து கொடுத்தனர்.


சீரமைக்கப்பட்ட ஈத்கா மைதான திறப்பு விழா, நேற்று நடந்-தது. திருச்செங்கோடு தொகுதி, கொ.ம.தே.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரன் நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஈத்கா மினாராவை, தி.மு.க., வக்பு வாரிய உறுப்பினர் சுபேர்கான் திறந்து வைத்தார். கல்வெட்டை, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருச்செங்-கோடு மேற்கு நகர செயலாளர் நடேசன், கிழக்கு நகர செயலாளர் கார்த்திகேயன், மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சுரேஷ்பாபு, முத்தவல்லி ராஜா முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement