கொல்லிமலையில் வாட்டி எடுக்கும் குளிர்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள மலை வாசஸ்தலமான கொல்லிம-லைக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லி மலை அடிவார பகுதியான காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றால், இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையை அடையலாம். பெரும்பா-லான சுற்றுலா பயணிகள் டூவீலரில் செல்வதற்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், சில நாட்களாக கொல்லிமலையில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. காலை, 10:00 மணி வரை மலைப்பகுதி முழுவதும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்-படைந்து வருகின்றனர். மேலும், கொண்டை ஊசி வளைவில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டதால் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய-விட்டபடி சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்