லாரி மோதி விபத்து முதியவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவர் மீது, பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் தேவி நகரைச் சேர்ந்தவர் பெஞ்சமின், 82. திருவள்ளூரில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில், ஆயில் மில் அருகே ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றிரவு 9:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement