சதித்திட்டம் முறியடிப்பு; ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடித்து அழிப்பு
ரஜோரி: ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்தனர்.
ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி தாலுகாவுக்குட்பட்ட கல்லார் வனப்பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெடிமருந்துகள் நிரப்பிய சக்திவாய்ந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் வெடிபொருளை பத்திரமாக செயலிழக்கச் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்தனர்.என்றும், வெற்றிகரமாக சதிச் செயல் முறியடிக்கப்பட்டு விட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன தான் மத்திய அரசு அவனுகளுக்கு நல்லது செய்தாலும், அவனை பொறுத்த வரையில் ரத்தம், குண்டு, வெறுப்பு, அடுத்தவனை கொல்வது போன்றவையே அவன் மனதில் நிறைந்து உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் அமைப்பின் தலைவன் ஒருத்தன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டான் என செய்தி வந்தது.. பாகிஸ்தானை உடைத்து பலவீனப்படுத்தாத வரை இந்த தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும் .மேலும்
-
இந்த முறை தோட்டாக்கள் தப்பாது... அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் மிரட்டல்
-
ஜனநாயகன் பட விவகாரம்; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
-
ராணுவ தினத்தன்று வீரர்களுக்கு சல்யூட்; வீரர்களின் சேவையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராஜ்நாத் சிங்
-
அனைவரும் நல்லா இருக்கணும்; ரஜினி பொங்கல் வாழ்த்து
-
மத்திய பிரதேசத்தில் வேன்-டிராக்டர் மோதி விபத்து: 5 பேர் பலி; 10 பேர் காயம்
-
நோட்டாவை ஆதரிக்காதீங்க; மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது; மோகன் பாகவத் பேட்டி