நோட்டாவை ஆதரிக்காதீங்க; மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது; மோகன் பாகவத் பேட்டி
மும்பை: நோட்டாவை ஆதரிப்பது மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது என நாக்பூர் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளித்த பிறகு நிருபர்களிடம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த டிசம்பரில், 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி, ஆளும் மஹாயுதி கூட்டணி சாதித்தது.
இந்நிலையில், ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இன்று காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூர் உள்ளாட்சித் தேர்தலில் அதிகாலையிலேயே ஓட்டளித்தவர்களில் மோகன் பாகவத்தும் ஒருவர். அவர் ஓட்டளித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு ஜனநாயக அமைப்பில், அரசை தேர்ந்தெடுப்பதற்கு ஓட்டளிப்பது அவசியம், எனவே அது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சரியான வேட்பாளருக்கு ஓட்டளிப்பது நமது கடமை.
இது இன்றைய முதல் கடமை, அதனால்தான் நான் முதலில் வரிசையில் நின்று ஓட்டளித்துள்ளேன். நோட்டாவை ஆதரிப்பது மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது. இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.
இன்று நடந்த தேர்தலில் யார் வெற்றி மகுடம் சூடுகிறார்கள் என்பது நாளை ஓட்டுகளை எண்ணி முடிவு அறிவிக்கும் போது தெரிந்துவிடும்.
வாசகர் கருத்து (11)
அப்பாவி - ,
15 ஜன,2026 - 18:40 Report Abuse
நிக்கிற ஒருத்தனும் சரியில்லை. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
15 ஜன,2026 - 18:08 Report Abuse
நாட்டில் சில்லறை, சாதி மற்றும் அல்லக்கை கட்சிகளை மக்கள் வோட்டு போடாமல் அடக்குவது அவசியம். இதுவே தேர்தல் நேரத்தில் அதிக அளவு கட்சிகள் இடையே பெட்டி மாறுவதை அதன் காரணமாக ஊழல் அதிகரிப்பதற்கு காரணம்.
தார் சாலைகள் 3 மாதத்தில் கரைந்து போவதற்கும், பாதாள சாக்கடைகள் மழை நேரத்தில் வீட்டிற்குள் வருவதற்கும், வீடு வரி போல பல வரிகள் அதிகரிப்பதற்கும் இதற்கு மிக பெரிய காரணம்.
தமிழ் நாட்டில் மட்டும் இதுபோல ஒரு 40-50 கட்சிகள் இருக்கலாம். 0
0
Reply
malanguyasin - ,இந்தியா
15 ஜன,2026 - 12:54 Report Abuse
ஆளை பாத்தா சீனாக்காரன் மாதிரி இருக்கார் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 ஜன,2026 - 12:24 Report Abuse
அப்படி என்றால் நோட்டா முறை தடைசெய்யப்படவேண்டும். வாக்கு இயந்திரத்தில் அந்த நோட்டாவை நீக்கவேண்டும். 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
15 ஜன,2026 - 12:15 Report Abuse
NOTA mandatory அப்ப தான் அரசியல்வாதிங்களுக்கு பயம் வரும். பயத்தினால் மட்டுமே வேண்டாம்னு சொல்றாங்க 0
0
Reply
R Dhasarathan - Cuddalore,இந்தியா
15 ஜன,2026 - 11:26 Report Abuse
படித்தவர்களுக்கு சீட்டு கொடுக்காதிங்க, திருடனுக்கு பதவி கொடுத்தால் எங்களது அதிருப்தியை எவ்வாறு உங்களுக்கு கூறுவது. நீங்கள் சொல்வது அரசியலமைப்பை அவதூறு செய்வது போலுள்ளது... 0
0
Reply
ஜெகதீசன் - ,
15 ஜன,2026 - 11:07 Report Abuse
இருப்பதில் யார் பரவாயில்லை என தீர்மானித்து ஓப்டளிக்கனும். நோட்டா வேஸ்ட். 0
0
Reply
பாலாஜி - ,
15 ஜன,2026 - 10:58 Report Abuse
நோட்டா வாக்களிப்பதைவிட வாக்களிக்காமல் இருப்பது நல்லது. 0
0
Reply
Ravichandran Kannan - ,இந்தியா
15 ஜன,2026 - 10:50 Report Abuse
வி நீட் நோட்டா. டான்டீ கிரியேட் problem 0
0
Reply
Sundar R - ,இந்தியா
15 ஜன,2026 - 10:45 Report Abuse
எதிர்வரும் 2026 தேர்தலுக்கு முன்பாகவே மத்திய அரசு மிகப்பெரிய தவறுகள் அனைத்தையும் செய்த தீயசக்தி திமுகவை மின்சார எரியூட்டல் மூலம் நன்றாக தகனம் செய்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யாதது, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக, 2026 அசெம்பிளி தேர்தலில் லட்சக்கணக்கான தமிழக மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போடுவதைத் தவிர்ப்பார்கள். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் இருக்கப் போவதால் நோட்டா என்ற பேச்சுக்கே இடமில்லை. 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
Advertisement
Advertisement