இந்த முறை தோட்டாக்கள் தப்பாது... அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு டிவி மிரட்டல்
டெஹ்ரான்: ஈரான் உள்நாட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு அரசு டிவி கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், 3,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்றாற் போலவே, டிரம்பும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஈரானை எச்சரித்த அவர், அரசு நிறுவனங்களை கைப்பற்றுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தேவையான உதவிகள் உங்களை தேடி வரும் என்று போராட்டக்காரர்களுக்கு அதிபர் டிரம்ப் தைரியம் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஈரான் அரசு டிவி, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்த போட்டோவை வெளியிட்ட ஈரான் அரசு டிவி, 'இந்த முறை இலக்கை தோட்டாக்கள் தவற விடாது,' எனக் குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான ஆதாரத்தை பகிர்ந்த இஸ்ரேல் - அமெரிக்க பத்திரிக்கையாளர் எமிலி ஸ்ரேடர், "ஈரான் அரசு டிவி எல்லைக் கடந்து விட்டது. கொலைமுயற்சியின் போது குண்டு காயம் பட்ட டிரம்பின் போட்டோவை வெளியிட்டு, 'இந்த முறை தோட்டாக்கள் தவற விடாது,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேரடி அச்சுறுத்தல்," எனக் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழி ஈரான் மூலம் ஏதாவது நல்லது நடந்தால் மிக மகிழ்ச்சி
இங்கு அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவோர் ஒரு முறை எண்ணி பாருங்கள் ஈரானை விட இந்தியாவின் முதுகில் குத்தியது குத்தி கொண்டு இருப்பது அமெரிக்கா தான் அதான் சிஐஏ தான்
வினைக்கு எதிர்வினை உண்டு உலகத்தை மிரட்டும் ட்ரம்பை மிரட்டுவது சரியே.
அமைதி வழி என்று சொல்லி உலகம் முழுவதும் தீவிரவாதம் செய்பவனை அடக்குவது நாகரீக உலகத்தின் அவசியம். என்ன வித்தியாசம் என்றால் அமெரிக்கா மறைமுகமாக தீவிரவாதத்தை ஆதரிக்கிறது - பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் உறவு மற்றும் வியாபாரம். ஈரான் நேராக ஆதரிக்கிறான்.
ஈரானின் அழிவும், அடக்குமுறை ஆதிக்க அழிவும் நமது நாட்டிற்கு, உலகத்திற்கு நல்லது.
None can even touch Donald Trump, he is invincible, the best president US has ever got, he will make sure American rules the world and brings back democracy even to the most backward countries like Greenland, all threats are utter waste, or is it?
வயது 70ஐ தாண்டிவிட்டால் செயல்களில் பேச்சில் எண்ணத்தில் சிறிய/நடுத்தர/பெரிய தடுமாற்றம் இருப்பது 100% உண்மை. ஆகவே தான் அரசு அலுவலகத்தில் 60 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வு கொடுக்கின்றார்கள். அதே போலத்தான் இந்த அரசு செயல்களிலும் நிச்சயம் அதை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நாட்டு மக்கள் அனைவரும் சிறந்த பயன் பெறுவார்கள். இல்லையென்றால் அமெரிக்கா போலவே எல்லா நாடுகளும் அறிவிழந்து செயல்படும்.
நல்லா இருப்பீங்க மகராசாக்களா அதை முதலில் பண்ணுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்!
அப்போ போனமுறை செஞ்சது இவனுகதானா? அவனுகளே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கறானுங்க? டிரம்ப் க்கு வசதியா போச்சே? இதே வச்சே அந்த நாட்டை குண்டு போட்டு அழிச்சிடலாமே?
ஆமா அமெரிக்காவை அழிச்சிடலாம், உலகம் நிம்மதியா இருக்கும், மோடிஜியும் நிம்மதியா இருப்பார்,
ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அழிந்தாலே.... உலகில் பாதி தீவிரவாதம் அழிந்து விடும்... தீவிரவாதிகளின் பிறப்பிடம் அந்த நாடுகள் தான் !!!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்களால், இன்று பல நாடுகள் பாதிக்கப் பட்டிருக்கிறது. எட்டு நாட்டு போர்களை நிறுத்தியாக கூறி, அந்த அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்று கூறித்திரிந்தவர், அது கிடைக்காத பட்சத்தில், இன்று பல நாடுகளில் போர் மூளும் அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறார். ட்ரம்பின் பயித்தியக்காரத்தனத்துக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.
அமெரிக்காவுக்கு முடிவுகட்ட ஒரேவழி, இப்போ இருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு முன் இஸ்ரேல்தான் முதல் தாக்குதல் நடத்தும், இந்த சாக்கில் நடுகல் சேர்ந்து இஸ்ரேலை அழித்துவிட்டால், அமெரிக்காவின் ஆட்டம் அடங்கிடும்.
பயங்கரவாதிகளை ஈரானை அழித்து காண்பித்து அலற விடவேண்டும்.மேலும்
-
முனியப்பன் கோவிலில் 140ம் ஆண்டு திருவிழா
-
போலீஸ்காரர் ஜீப் மோதி விபத்து தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் பலி
-
குப்பை கொட்டப்படும் இடங்களில்.. சிறிய பூ ங்கா! . 20 'ஹாட் ஸ்பாட்' களில் அமைக்க திட்டம்
-
உழவர் சந்தையில் பொங்கல் வைத்த விவசாயிகள்
-
பிளாக்கில் விற்க மது பாட்டில் பதுக்கியவர் கைது !
-
300 கிலோ சர்க்கரை பொங்கலுடன் பூஜை