விசாரணை இடத்தில் மம்தா ஆஜர்: ஆதாரங்களை பறித்து இடையூறு செய்வதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
கோல்கட்டா: '' முதல்வராக இருந்து கொண்டு மம்தா, விசாரணைக்கு இடையூறு செய்வதாகவும் பணமோசடி மற்றும் நிலக்கரி கடத்தலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கிறார்,'' என அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. அவருக்கு எதிராக கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
விமர்சனம்
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. தேர்தல் கமிஷன் நடத்திய எஸ்ஐஆர் பணிகள் முதல் பல்வேறு விஷயங்களில் பாஜவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஐபேக் நிறுவனம்
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தோற்றுவித்த ஐபேக் என்ற நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் வியூக பணியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகிவிட்டதால், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக தற்போது ரிஷி ராஜ் சிங், பிரதிக் ஜெயின், வினேஷ் சந்தேல் ஆகியோர் உள்ளனர்.
சோதனை
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ( ஜன.,08) சோதனை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மம்தா பானர்ஜி சோதனை நடக்கும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.
இதுவா வேலை
அப்போது அவர் கூறியதாவது: எங்களின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சியின் தொடர்புடைய ஹார்டு டிஸ்க்களை சேகரிப்பதா அமலாக்கத்துறை மற்றும் அமித்ஷாவின் வேலை. நாட்டை பாதுகாக்க முடியாத உள்துறை அமைச்சரால், எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துச் செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
குற்றச்சாட்டு
@block_Y@இதனைத் தொடர்ந்து ஐபேக் நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின் வீட்டிற்கும் மம்தா சென்றார். அங்கும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இவர் திரிணாமுல் காங்கிரசின் ஐடி விங் தலைவராகவும் உள்ளார். இங்கிருந்து மம்தா, மொபைல்போன், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. block_Y
அரசியலமைப்புக்கு எதிரானது
இங்கு நடக்கும் சோதனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: பிரதிக் ஜெயின் வீட்டில் நடக்கும் சோதனை அரசியல்சாசனத்துக்கு எதிரானது. அரசியல் ரீதியாக சோதனை நடக்கிறது. கட்சி தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை எடுத்துச் செல்ல முயற்சி நடக்கிறது. அதில் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இருக்கிறது. அவற்றை எடுத்து வந்துவிட்டேன்.பாஜ அலுவலகத்தில் நான் ரெய்டு நடத்தினால் என்னவாகும். ஒரு புறம், எஸ்ஐஆர் பணி என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் காரணமாக, எனது கட்சி குறித்த தகவல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் தொடர்புடையதல்ல
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நிலக்கரியை சட்டவிரோதமாக திருடி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறை, மேற்கு வங்கத்தில் 6 மற்றும் டில்லியில் 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்பு உடைய ஒருவர் ஐபேக் நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

@block_G@இந்த சோதனை எந்த அரசியல் கட்சியையும் இலக்காக கொண்டு நடக்கவில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளோம். எந்த கட்சி அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படவில்லை. தேர்தல் தொடர்பாக சோதனை நடக்கவில்லை. block_G
பணமோசடிக்கு எதிரான வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். சட்டப்பாதுகாப்புகளின்படி இந்த சோதனை நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், '' முதல்வராக இருந்து கொண்டு விசாரணைக்கு மம்தா இடையூறு செய்கிறார். நிலக்கரி கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கிறார். அவரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்,'' எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒண்ணுமே புரியல அப்ப அ ரசியல்வாதியா இருந்தால் ரைட் நடந்தாலும் உள்ள போகலாமா மத்திய அரசு ரொம்பவும் துணிச்சல் இன்றி உள்ளது
மத்திய விசாரணை அமைப்புகள் நோக்கம் எதுவாக இருந்தாலும், நிறுவனத்தை சோதனையிட அமுலாக்க துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம். மாநில நிர்வாகம் ஒத்துழைப்பு கட்டாயம். மம்தா முதல்வர் என்றாலும் சட்ட பேரவை மற்றும் தன் தொகுதி தவிர முன் அனுமதி இன்றி எங்கும் நுழைய முடியாது. மாநில முதல்வர் என்றாலும் பரிந்துரை மட்டும். சிறு உத்தரவு கூட போட முடியாது. அது செல்லாது. மாநில அமைச்சர்கள் கற்பனை அதிகாரத்தில் இருந்து விடுபட வேண்டும். கபில் போன்ற வழக்கறிஞர் நீதிபதிக்கு தவறான வழிகாட்டி வருகிறார்கள். மத்திய மந்திரிக்கு மட்டும் தான் சற்று அதிகாரம் இருக்கும். மாநில நிர்வாக தலைவர் கவர்னர் முதல்வர் அல்ல.
பங்களாதேஷி கும்பல் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளையும் காலில் போட்டு மிதிக்கிறது. அரசு திட்டங்களில் கொள்ளை அடித்த பணத்தை சில அமைப்புகள் மூலமாக திருப்பி விடுவதே இவர்களின் செயல். இல்லாவிட்டால், ஏன், அரசியல் சாசனத்தின் மீது பதவி ஏற்று கொண்ட ஒரு முதல் அமைச்சர் உடனே அங்கே போய் ஒரு பெரிய கும்பலின் மூலம் பைல்களை காரில் கடத்துவது வரலாற்றில் இல்லாத செயல்.
She should be summarily prosecuted for preventing the Government officials performing their duties.
she must be arrest and put in the jail for min 25 yrs
விடியல் கட்சி விஞ்ஞான கட்சி.. ஐ பேக்கிடம் கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் அவர்களுக்கு தெரியாமலே திருடி இருப்பார்கள்..
CM Mamata Banerjee herself rushed to I PAC chief Pratik Jains residence. Why would a CM rush to a businessmans house, even if he is providing political consultancy services? What was the urgency? Because I PAC is expert at taking money using shell accounts, In WB they must have done the same
சோதனை நடத்தியதில் உள்ளர்த்தம் இருக்கோ இல்லையோ, அதிகார துஷ்ப்ரயோகம் ஏற்படுத்தியது இல்லை.
அப்படின்னா - விடியல் ஆவணங்களும் அங்கே இருக்குமே
பேட்ட ரவுடி மாதிரி ஒரு முதலமைச்சர் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. அவர் தவறு செய்திருக்கிறார் அதனால் தான் அந்த ஆவணங்களை எடுத்து சென்றார் என்று தோன்றுகிறதுமேலும்
-
எதிர்காலப் போர்களுக்கு தயாராகி வருகிறோம்; ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேச்சு
-
ஈரானில் இந்திய மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து அடவாடி; மத்திய அரசுக்கு ஓவைசி வலியுறுத்தல்
-
இந்த முறை தோட்டாக்கள் தப்பாது... அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு டிவி மிரட்டல்
-
ஜனநாயகன் பட விவகாரம்; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
-
ராணுவ தினத்தன்று வீரர்களுக்கு சல்யூட்; வீரர்களின் சேவையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராஜ்நாத் சிங்
-
அனைவரும் நல்லா இருக்கணும்; ரஜினி பொங்கல் வாழ்த்து