தீர்ப்பு தந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல்; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கவர்னர் ரவி குற்றச்சாட்டு
சென்னை:திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விவகாரத்தில், தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் போன்று 75 ஆண்டு வரலாற்றில் நடந்ததில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.
சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: இந்தியாவின் ஜனநாயகமானது - அதன் உணர்வில் நாகரிகமானது, வடிவில் அரசியலமைப்புச் சார்ந்தது. செயல்பாட்டில் வலிமையானதாகவும், நிலையானதாகவும், துடிப்பானதாகவும் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியத்தில் வேரூன்றிய இது, குடியரசை பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து பரிணமிக்கும் நவீன அமைப்புகளால் நிலைநிறுத்தப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்துள்ள அசாதாரணமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்துக்கு இது வழிகாட்டுகிறது. இதன் தாக்கம், இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பிரதிபலிக்கிறது. அதாவது, 25 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்; இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தேசிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இந்த புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கை, ஒவ்வொரு குடிமகனின் ஆற்றலுடன் சேர்ந்து, நமது குடியரசை தொடர்ந்து நிலைப்படுத்தி பலப்படுத்துகிறது. அரசியலமைப்பு நிறுவனங்களைக் குறைமதிப்புக்கு உள்படுத்தும் முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் நடப்பது கவலை அளிக்கிறது. நீதித்துறை, தேர்தல் கமிஷன் மற்றும் பிற அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சி நடக்கிறது.
இதுபோன்ற செயல்கள் தேசத்தின் தன்னம்பிக்கையைத் தாக்கி, குடியரசின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன. நமது வரலாற்றில் இதுவரை நடக்காதது. தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் போன்று 75 ஆண்டு வரலாற்றில் நடந்ததில்லை. திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவில் மகிழ்ச்சி இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றம் செல்லுங்கள். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
இந்நிகழ்வில், 3,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்து, தேசத்தின் பெருமை, ஒற்றுமை மற்றும் தேசபக்தி உணர்வை எதிரொலிக்கும் வகையில், வந்தே மாதரம் பாடலை உணர்ச்சிபூர்வமாகப் பாடினர்.
கொடைக்கானல் வழக்கில் நீதிபதி வக்கீல் வீட்டு மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பை துண்டித்த வரலாறு உண்டு ஆனால் அவதூறு, கொச்சைப்படுத்தி நூல் வெளியிடும் சில்லறைத்தனம் இப்போதுதான் நடக்கிறது
எத்தனை முறை உச்சநீதிமன்றம் உங்களுக்கு உத்தரவு அளித்துள்ளார் நீங்கள் அதையே மதித்தில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
உன்னை கூட வாடகை வாயன் என்று பலமுறை மக்கள் பாராட்டியுள்ளார்கள் சிவநாயகம்
நீங்கள் ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தால் தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு .... இல்லாவிட்டால் கிட்னி திருட்டுக்கழகம் வன்முறையை நடத்தி வெல்ல முயற்சிக்கும் .....
ஏழை மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சி DMK.
நீதிபதி லோயா யார் தெரியுங்கலா
சொம்பு திகழ்...இன்னும் நல்லா கதறு ...எவனும் இனிமே சீண்டமற்றாங்க
கவர்னர் போன்ற அரசியல் சாசன பதவி அனைத்து இந்திய ஆட்சி பணியை எல்லை மீறாமல், கண்காணித்து கட்டுபாட்டில் வைப்பது. புகார், ஆவண அடிப்படையில் சட்ட விரோத மசோதா தயாரிக்க உதவிய மூத்த அதிகாரிகள் மீது கவர்னர் சார்ஜ் மெமோ போன்றவை அனுப்பலாம். அரசியல் ஆகும். நிர்வாகம் மோசம் ஆகாது. சில நீதிபதிகள் அரசியல் சாசன நிர்வாகம் மீறி வழக்கறிஞர் தவறான வழிகாட்டுதலை ஏற்று, அதிக அதிகாரம் எடுத்து கொண்டதன் விளைவு நல்ல நீதிபதியை பாதிக்கிறது? . இதனை சரி செய்தால் அரசியல் சாசன பதவிகள் முழு அதிகாரம் பெறும். திமுக வரும் முன் அரசு அதிகாரிகள் முழு மரியாதை பெற்றனர்.
கவர்னருக்கு என்று எந்த தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுதான் நிர்வாகத்தை நடத்தும். அவசர சூழலில் மட்டுமே கவர்னருக்கு வழிநடத்தும் அதிகாரங்கள் உள்ளன.
நீதிபதியை அச்சுறுத்துவது யார்
பாலாஜி கோமாவில் இருந்தாயா
சாட்சாத் துக்ளக்கார் மற்றும் அவருடைய அடிப்பொடிகள் ....
கவர்னரையே மதிக்காதா திமுக யாரையும் மதிக்காது. தமிழக மக்களே, வாக்களிக்கும்போது, கட்சிகளின் நடவடிக்கைகளை பார்த்து வாக்களியுங்கள்.
பதவியின் கண்ணியம் காக்க தனக்குள்ள அதிகாரத்தை நல்ல முறையாக காட்டிவந்தால் மதிப்பு தானாக வரும்.
சார் நீதிபதியையே போட்டு தள்ளிவிட்டு நாட்டுக்கே உள்துறை அமைச்சரானவர்கள் இந்த. 75 ஆண்டுக்குள் உண்டு சார்
உண்மையான அக்கறையோடு பேசுகிறார்மேலும்
-
தமிழகம் முழுதும் பொங்கல் பரிசு தொகை வாங்காதோர் 7.81 லட்சம் பேர்!
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.2,500 உயர்வு!: ஏற்க மறுத்து தொடர் போராட்டம்
-
இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம் * ராகுல் சதம் வீணானது
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4,184 பேருக்கு முதல்வர் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
-
சாதிக்குமா இளம் இந்தியா * 19 வயது உலக கோப்பை தொடர் துவக்கம்
-
கடைசி பந்தில் டில்லி வெற்றி: லிசெல் லீ அரைசதம்