தமிழகம் முழுதும் பொங்கல் பரிசு தொகை வாங்காதோர் 7.81 லட்சம் பேர்!
சென்னை: ஜன. 15- தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்ட 3,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை, 7.81 லட்சம் பேர் வாங்கவில்லை. மொத்த கார்டுதாரர்களில், இதுவரை 98 சதவீதம் பேர் பரிசு தொகுப்பு வாங்கியுள்ள நிலையில், தர்மபுரி, திருப்பத்துார், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை மாவட்டங்கள், அதில் முதலிடத்தில் உள்ளன. தென் சென்னை கடைசி இடத்தில் உள்ளது.
தலா, 3,000 ரூபாய்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது.
இவற்றை வழங்க, கார்டுதாரர்கள் வீடுகளில் 'டோக்கன்'கள் வினியோகிக்கப்பட்டன. அறிவித்தபடி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, கடந்த 8ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் பட் ரோட்டில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, அன்று முதல் மாநிலம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், கடந்த ஒரு வாரமாக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் கூட்டம் காணப்பட்டது.
6,447 கோடி ரூபாய்
நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி, 2 கோடியே 14 லட்சத்து 91,255 கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் என, மொத்தம் 6,447 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இது, மொத்த கார்டுதாரர்களில் 96 சதவீதம். இதில், தர்மபுரி, திருப்பத்துார், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
அதாவது, இம்மாவட்டங்களைச் சேர்ந்த கார்டுதாரர்களில், 98 சதவீதம் பேர் பொங்கல் பரிசுகள் வாங்கியுள்ளனர். அதே நேரத்தில், ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை, 7 லட்சத்து 80,764 பேர் வாங்கவில்லை.
தமிழகத்தில் வசதியானவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக தென் சென்னை உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில், 94 சதவீதத்துடன் தென் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தேனி, மதுரையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் 95 சதவீதமாக உள்ளது.
ரூ.3,000 ரொக்கத்தை அதிகம்வாங்கிய 'டாப் 10' மாவட்டங்கள்
* சென்னையை, வட சென்னை மற்றும் தென் சென்னை என, இரு மாவட்டங்களாக உணவு வழங்கல் துறை பிரித்துள்ளது. வட சென்னையில் மொத்தம் 10.37 லட்சம் கார்டுதாரர்களில், 9.93 லட்சம் பேர் பொங்கல் பரிசு வாங்கியுள்ளனர். இது, 96 சதவீதம். ன் சென்னையில் உள்ள 10.59 லட்சம் கார்டுதாரர்களில், 9.99 லட்சம் பேர் பரிசு வாங்கியுள்ளனர்.
***
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை " என்பது போல் இது போன்ற அரசு திட்டங்கள் தகுதி, தரம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்க வேண்டும். விடியல் மகளிர் பேருந்து போல், தேவைப்படுபவர்கள் அனைவரும் பெற்றுக்கொள்வார்கள். வேண்டாதவர்கள் விலகி நிற்பார்கள்.
வாங்காதவர்கள் 7.81 லட்சம் பேர். வாங்கியவர்கள் 2,14,91,255 அதில் உண்மையானவர்கள் 1,44,00,000 மீதி 70,91,255 போலிகள் அந்த அந்த ஊர் கவுன்சிலர் டப்பாக்கள் / ஆதரவாளர்கள் என்று தெரிய வரும் ஆய்வு செய்தால்
பொங்கல் கொண்டாடாத எனது குடும்பத்தினர் அதைப் பெறவில்லை ....
அவ்வளவு வெறி??
மத்திய அரசு தரும் ரேஷன் அரிசியை ஆக்கி உண்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டை இருக்கனும். வரி வருமானம் வீணாக எங்கோ போகிறது.
நல்ல கருத்து ......
நாட்டில் இருக்கும் பெரும் பண முதலைகள் மட்டும் தள்ளுபடி பொற்று சாப்பிட வேண்டும்
சாதாரண மக்கள் பயன் அடைய கூடாது
மொத்தத்தில் தமிழ் நாடு முழுக்க வாங்கியவர்கள் 95% சராசரியாக இருக்கும் என்பது தெரிகிறது . அப்படி என்றால் இவர்கள் அனைவரும் ஆளும் கட்சியை ஆதரிக்கிறார்கள் என்று கொள்ளலாமா ANONYMOS
உங்கள் ஆசை திராவிட முனேற்ற கழகம் திரும்பி வரவேண்டும். வரட்டும் போது நீங்கள் கரண்ட் பில், வாட்டர் பில், டாஸ்மாக் பில், வீடு மனை வரி, நில வரி மற்றும் பல வரிகள் அதிகமாக கட்டுவீர்கள். அவர்களும் குடும்பம் அவர்கள் கட்சிக்காரர்கள் ரியல் எஸ்டேட், சினிமா, ஆற்று மண் , கல் குவாரி. கட்ட பஞ்சாயத்து, கஞ்சா , கள்ள சாராயம், மதமாற்றம் , கோயில் நீளத்தை சூரை ஆடுவது எல்லாம் பல நல்ல காரியங்கள் நடக்கும். உங்களுக்கு தினம் 200 ரூபாய் எதிர் கட்சியை கழுவி கழுவி ஊற்றினால் கிடைக்கும். உங்கள் வருங்கால சந்ததியர்கள் பற்றி எவ்வித கவலை கொள்ளாமல் வாழுங்கள்.
ஏதோ தமிழகத்தில் மட்டும் என்பது மாதிரி
மாற்றம் ஏற்பட்டால் இது எல்லாம் குறைந்து விடுமா
ஏன் இந்த ஏமாற்று வேலை
இங்கே கருத்து போடுபவர்கள் கூறுவதை பார்த்தால் வெறும் 7.81 லட்சம் பேர்தான் வாங்கவில்லை என்றால் மீதி வாங்கிய அனைவரும் அரசுக்கு ஆதரவு நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது கருத்து போடுபவர்களுக்கு இடி விழுந்தது போல தான் இருக்கிறது
இப்படிச் சொல்லித்தான் உ பி ஸ் மனசை தேத்திக்கணும் .....
என்னோட ration card க்கு தமிழக அரசின் எந்த உதவியும் கிடையாது. பேருக்கு ஒரு ID card ஆக மட்டுமே இருக்கு.
ஆக, தமிழ்நாட்டில் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் ஏறக்குறைய 7.81 லட்சம் பேர் இருக்கிறார்கள், வாழ்த்துக்கள்.
இப்படி கண்டபடி கருத்து போடுபவன்தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடாதவனாக இருப்பான்
அத அப்படி பாக்க கூடாது நாம வாங்கலைன்னாலும் அதை கொள்ளை அடிக்க தான் போறாங்க அதை வாங்கி யாருக்காவது கொடுக்கலாம் அப்படின்னு வாங்கினவங்க தான் நிறைய பேர்
நான் வாங்கலைன்னு ஏன் சொல்லல அனாமத்து ஆளே?
பையும் தரவில்லை... புண்ணாக்கும் தரவில்லை. நாம் கொண்டு செல்லும் பையிலேயே ஜீனியையும் போட்டர்கள். அரிசியையும் போட்டார்கள். பணத்தை இரு நபர்கள் அதில் ஒருவர் உள்ளூர் திமுக ஊப்பி ஆளுக்கு மூன்று முறை எண்ணி கொடுத்தார்கள்.
RRR என்ற உடன் 3 முறை எண்ணி கொடுத்தார்களா .
எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் இதுவரை வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதே இல்லை.. வீடு வீடாக டோக்கன் விநியோகம் என்பதே மிகப்பெரும் உருட்டு. நாம்தான் ரேஷன் கடைக்கு சென்று டோக்கன் வாங்கிக்கொள்ள வேண்டும்.மேலும்
-
ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்