ஓசூர் பாட்டா தொழிலாளர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,

கொல்கட்டா: பாட்டா நிறுவனம், ஓசூரில் உள்ள, தன் காலணி தொழிற்சாலை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை இந்நிறுவனத்தின் இயக்குநர் குழு அளித்துள்ளது.

மொத்தம் எத்தனை பேருக்கு வி.ஆர்.எஸ்., வழங்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஏற்கனவே, ஹரியானா பாட்டா தொழிற்சாலையில் அனைவருமே வி.ஆர்.எஸ்., பெற்றதால், ஆலை மூடப்பட்டது. கர்நாடகாவில் உள்ள ஆலையும் இதே பாணியில், காலணி தயாரிப்பை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement