'ஆன்லைன்' சூதாட்டத்தில் மூழ்கிய மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்': :ஆசிரியர்களுடன் போலீசார் கை கோர்ப்பு
சென்னை: 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளில் மூழ்கியுள்ள, மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுக்க, 17,450 ஆசிரியர்களுடன், போலீசார் கை கோர்த்து உள்ளனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: தமிழகத்தில் 'ஆன்லைன்' விளையாட்டுகளை கண்காணிக்க, தனியாக ஆணையம் செயல்படுகிறது. இது, 'ஆன்லைன்' சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்யும் நபர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து வருகிறது. 'ஆன்லைன்' விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு, வயது மற்றும் நேரத்தை வரையறை செய்துள்ளது.
இந்நிலையில், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் மூழ்கியுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களை அடையாளம் காணும் பணி துவக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 17,450 ஆசிரியர்களுடன்இணைந்து, 1.47 லட்சம் மாணவர்களிடம், 'ஆன்லைன்' விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட செயலிகள் குறித்து பேச்சு கொடுத்து, விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளில், மாணவ, மாணவியர் மூழ்கி கிடப்பது தெரியவந்தால், அவர்களுக்கு பெற்றோர் உதவியுடன் 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது நிறைவேறாது.
முதலில் டாஸ்மாக் ஐ மூடுங்கள். பாதி பிரச்சினை தீர்ந்தது விடும். குடிக்கு மக்களை அடிமையாகி விட்டு எதை செய்தாலும் உபயோகமில்லை.
மிக சரியான கருத்து , இன்றைக்கு நடைபெறும் 90 சதவிகிதம் குற்றங்கள் , கொலைகளுக்கு டாஸ்மாக் மதுவே கரணம். . தேர்தலுக்கு முன் வாக்களித்த படி டாஸ்மாக்கை மூடுங்கள்.
இதுவும் டாஸ்மாக் மூடியது போலத்தான். தமிழினம் மீதான திராவிட வன்மம்..
CBSE பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பில் playing cards பற்றி சொல்லப்பட்டுள்ளன. ( Chapter probability page number 207 mathematics textbook for class 10 NCERT) . மாணவர்கள் playing cards பற்றி படிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. எனவே இதனை உடனடியாக d portion என்று அறிவித்தால் நல்லது.
இதை அனுமதிப்பது மக்கள் எக்கேடு கெட்டு கூட்டிச்சுவர் ஆனால் என்ன? என்று கருதும் அரசுகள். அதற்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம் என்று மக்களின் வரிப்பணத்தை எடுத்து விரயம் செய்வதும் அதே மக்கள் விரோத அரசுகள்தான்.மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்