இந்த ஆட்சி வளர்ச்சிக்கானது அல்ல; சொல்கிறார் ராகுல்
புதுடில்லி: பாஜ இரட்டை இன்ஜின் அரசின் ஆட்சி வளர்ச்சிக்கானது அல்ல, அழிவுக்கானது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
அவரது அறிக்கை; ஊழல் நிறைந்த ஜனதா கட்சியின் இரட்டை இன்ஜின் அரசுகள் மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன. ஊழல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற விஷமத்தன்மையான செயல்கள், பாஜவின் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் பரவியுள்ளது.
இவர்களின் ஆட்சியில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினரின் வாழ்க்கை வெறும் புள்ளி விபரங்களாக மட்டுமே இருக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் தான் ஆட்சி நடத்துகிறது.
பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் அரசு கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே. சாதாரண இந்திய குடிமகனைப் பொறுத்தவரையில் இந்த ஊழல் இரட்டை இன்ஜின் அரசு என்பது வளர்ச்சிக்கானது அல்ல. அழிவின் வேகம். தினமும் யாரோ ஒருவருடைய வாழ்க்கையை நசுக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, டில்லி ஆகிய பாஜ ஆளும் மாநிலங்களில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, காங்கிரஸ் எம்பி ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
சரியான அரசியல்வாதி சூடு கசுரணை வெட்கம் மானம் எதுவும் இல்லாத ஒரு ஜந்து.
விடியாத விடியல் அரசை மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடப்பதை சொல்லி இருக்கிறார்,
அதாவது எங்கள் குடும்ப வளர்ச்சிக்கானது அல்ல என்கிறார்
ராகுலின் எரிச்சலின் வெளி பாடு.
ஆம் உண்மை.
இவர் இண்டி கூட்டணி ஆட்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களை சொல்கிறார் போல் தெரிகிறது.... மக்களும் அதை தான் சொல்கிறார்கள்.
அமெரிக்க பத்திரிக்கைகளில் வரும் ஆய்வு கட்டுரையை தூக்கி வந்து அதை வைத்து இங்கே பிரச்சனை பண்ணுவது ராகுல்காந்தி யின் வேலையாக போய் விட்டது. டிரம்ப் சொல்வது சரிதான் இந்தியப் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையைச் சொன்னதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார் ராகுல்காந்தி. இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கும்போது யாருக்கு வெளிப்புற எதிரிகள் தேவை? நாட்டிற்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு நாங்கள் எதிர்த்துப் போராடுவோம் என்று சொல்வதற்குப் பதிலாக, இந்த ராகுல் அமெரிக்காவை ஆதரிக்கிறார்.
ஆமாம்டா கண்டிப்பா உங்க குடும்ப வளர்ச்சிக்கானது அல்ல
Rahul ji , you are claiming present Indian government is not for economic prosperity while IMF, World Bank , Asian Development Bank and all international funding agencies are confirming the steady growth of India . Who is right ?
இப்படி பேசினா, ஜனங்க சிரிச்சிட்டு உங்களுக்கு இதுவரை போடற ஓட்டையும், மாத்தி போட்டுருவாங்க. அப்புறம் தாய்லாந்து தான் நிரந்தரம் ஆகிவிடும்.மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்