அமெரிக்காவின் நலனுக்காக போராடுகின்றனர்: ஈரான் மதகுரு கமேனி காட்டம்
டெஹ்ரான்: '' மற்றொரு நாட்டின் அதிபரை(டிரம்ப்) மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக சொந்த நாட்டின் தெருக்களை போராட்டக்காரர்கள் நாசப்படுத்துகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தூக்கி எறியப்படுவார்'' என ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கூறியுள்ளார்.
ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது.
ஆட்சியாளரான மத குரு அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், நாற்பத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், மக்கள் வலுவாக போராடினால், ஈரான் ஆட்சியாளர்கள் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். கமேனி எங்காவது செல்ல விரும்புகிறார். ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு அயதுல்லா கமேனி நாட்டு மக்களுக்கு டிவி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: டிரம்ப் திமிர்பிடித்தவர். அவரது கைகள் ஈரானியர்களின் ரத்தத்தால் கறை படிந்தவை. அமெரிக்க அதிபர் தூக்கி எறியப்படுபவார். அவரது சொந்த நாட்டில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். வேறொரு நாட்டின் ஜனாதிபதியை மகிழ்விக்க தங்கள் சொந்த நாட்டை போராட்டக்காரர்கள் நாசமாக்குகிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், போராட்டக்காரர்களை குண்டர்கள் என்றும் நாசக்காரர்கள் என்றும் விமர்சித்ததுடன், அவர்களுக்கு முன் நான் பின்வாங்க மாட்டேன். 1979 ல் நடந்த புரட்சியின் போது ஈரானை ஆட்சி செய்தவர்கள் தூக்கி எறியப்பட்டதுபோல், டிரம்ப்பும் தூக்கி எறியப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
கொமைனி நாற்பது வருஷம் மக்களை துன்புறுத்தியது போதும். ஆட்சியை விட்டு விலகிடு என்று மக்கள் போராடுகிறார்கள். அமெரிக்காவிற்காக ஈரானில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?
முல்லாக்களால் நாசமான முதல் நாடு ஈரான். ஈரான் மக்கள் பாலஸ்தீனியத்துக்கோ அல்லது மதரஸாக்களுக்கோ ஏங்கவில்லை. ஏழ்மையின்/வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள். இழப்பதற்கு ஏதுமிலை என்பதனால் ஆட்சியாளர்களை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். மற்ற அரபு தேசங்கள் மகிழ்ச்சியாய் இருக்க நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்ற கேள்வி தீயாய் பரவி இருப்பதே காரணம். கூடவே இஸ்ரேல் பிரதமரின் பணிவான வேண்டுகோள். கம்மேனியின் பரம்பரை வாரிசு ஆட்சி ஒழிந்தே ஆக மக்கள்/மாணவர்கள் வீதியில் இரங்கி விட்டார்கள். ஈரானில் பண வீக்கம் விண்ணை தாண்டி அதற்கும் மேலே.
ஈரானில் உள்ள அயதுல்லா அலி கமேனியின் இஸ்லாமிய ஆட்சி அதன் கடைசி அந்திம நாட்களில் இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் ஈரான் மக்கள் யாரும் மறைந்து கொள்வதில்லை தைரியமாக வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.
ஒரு காலத்தில் மொத்த ஈரானும் பார்சிகள் மதத்தவரிடம் இருந்தது. அவர்களை கொலை செய்தும், விரட்டியும் ஆட்சியை பிடித்து மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொண்டது இந்த கும்பல். கூடிய விரைவில் இந்தியாவிலும் இது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இளிச்சவாய இந்துக்கள் இவர்களை ஆதரிக்கும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுவார்கள்.மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறக்கம் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது
-
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
-
புதிய உச்சம் தொட்ட எஸ்.ஐ.பி., முதலீடு: தங்க இ.டி.எப்., முதலீடும் அதிக வளர்ச்சி
-
பங்குச்சந்தை புரோக்கர்களுக்கு குட் நியூஸ்: தொழில்நுட்ப கோளாறு விதிகள் மாற்றம்
-
கிரெடிட் கார்டில் செலவு நவம்பரில் 11.50% அதிகரிப்பு
-
உபா., சட்ட கைதிக்கு ஆதரவு; நியூயார்க் மேயர் மம்தானிக்கு இந்தியா கண்டனம்