ஜனநாயகனுக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கோவை: “ஜன நாயகன் படத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'ஜன நாயகன்' திரைப்படத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்சார் போர்டு சட்டப்பூர்வ கடமையை செய்து வருகிறது. படத்தை முழுமையாக பார்த்த சென்சார் போர்டு எந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும்.
கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இதுவரை எண்ணிக்கை அளவில் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
த.வெ.க.,பா.ஜ.,வுக்கு வந்தால் அது அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறும் என்ற கருத்தை தமிழிசை சவுந்தரராஜன் கூறியது அவருடைய கருத்து. பா.ஜ., யாரையும் அடிபணிய வைக்கவில்லை. கூட்டணி என்பது பரஸ்பரம் புரிதலின் அடிப்படையிலேயே அமையும். தே.மு.தி.க., எங்களது கூட்டணியில் இணைய வேண்டும் என்பதே பா.ஜ.,வின் விருப்பம் என்றாலும், இறுதி முடிவு அவர்களிடமே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் எல்லா மொழி திரைப்படங்களையும் ஆர்வமாக பார்க்கின்றனர். காங்.,கட்சி, விஜய் பக்கம் நகர்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. தி.மு.க., அறிவித்த, 532 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அ.தி.மு.க.,வில் யாரை சேர்க்க வேண்டும் என்பது குறித்து இபிஎஸ் தான் முடிவு செய்வார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
This is a typical example of the proverb "Engappan kuthirikkulla illa". please do not under estimate people.
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்,நம்பி விட்டோம்!
பிறகு எதற்கு மேல் முறையீடு
இதற்கான பதில் தேர்தல் முடிந்த உடன் உங்களுக்கு புரியும்
ஜனநாயகனுக்கும் பாஜாகவுக்கும் சம்பந்தம் இல்லை தீபதூணுக்கும் திமுகாவுக்கும் சம்பந்தம் இல்லை நீயும் தனி நீதிபதி உத்தரவை மதிக்கவில்லை நானும் இல்லை. நீ நல்லவன் என்றால் நானும் நல்லவன்.
எத்தனை முறை திமுக நீதிமன்றத்தில் வாங்கி கட்டினாலும் உடன்பிறப்புக்கு புரிவதில்லை. 500 கோடி செலவு செய்து படமெடுக்க தெரிந்த அறிவாளிகளுக்கு சிறிதும் திட்டமிடாமல் வம்பு செய்து அவசரமாக சான்றிதழ் வாங்கிவிடலாம் என்று மட்டும் எங்கிருந்து நம்பிக்கை வருகிறது?
சமூக தீரவிரவாதம் என்பது இதுதான். கட்சியின் கொள்கையை அரசின் கொள்கையாக முடியாது. ஓட்டுப்போடாதவர்கள் ஓட்டுப்போட்டவர்களை விட பல மடங்கு அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பாவம் ஜனநாயகம்... மக்கள் கவலைப்படுகின்றனர்
அதை தானே சொல்ல வந்தீர்கள்?
திராவிட தற்குறிகளுக்கு புரியாது என்று சொல்ல வந்தார்மேலும்
-
ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்