பயங்கரவாத கூடமாக மாறும் பிரிட்டன் பல்கலைகள்; உதவி தொகையை நிறுத்தியது யு.ஏ.இ.,
லண்டன்: பிரிட்டன் பல்கலைகளில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வந்த யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தற்போது அங்கு உள்ள பல்கலைகள் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களின் பிடியில் இருப்பதாக கூறி, உதவித்தொகையை நிறுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உயர் கல்வி படிக்கும் தங்கள் நாட்டு மாணவர்களுக்கு மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவித்தொகை வழங்கி வருகிறது.
இந்த உதவித்தொகை திட்டம், சிறந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம், தினசரி செலவு,
பயணம், மருத்துவ காப்பீடு என அனைத்தையும் வழங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் பல்கலையில் படிக்கும் யு.ஏ.இ., மாணவர்களுக்கான உதவித்தொகையை அந்நாட்டு கல்வி அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து பிரிட்டன் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரிட்டன் பல்கலைகளில், 'முஸ்லிம் பிரதர்ஹுட்' அமைப்பு இயங்குகிறது. இதை பயங்கரவாத அமைப்பாக யு.ஏ.இ., வகைப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு பல்கலை மாணவர்களை பயங்கரவாத கருத்துக்குள் இழுப்பதாக குற்றஞ்சாட்டி, அவற்றை பல்கலை வளாகங்களில் தடை செய்ய பிரிட்டன் அரசிடம் வலியுறுத்தி இருந்தது.
அது ஏற்கப்படாததால், பிரிட்டன் பல்கலையில் படிக்கும் தங்கள் நாட்டு மாணவர்களுக்கான உதவித்தொகையை யு.ஏ.இ., நிறுத்தியுள்ளது. அதே சமயம் மற்ற நாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையை தொடர்ந்து வழங்குகிறது.
ஆண்டுதோறும் 8,000க்கும் மேற்பட்ட யு.ஏ.இ., மாணவர்கள் பிரிட்டன் பல்கலையில் சேருகின்றனர். உதவித்தொகை நிறுத்தத்தால் இந்த எண்ணிக்கை கடுமையாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எகிப்து, சிரியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் இருந்து வரும் தீவிரவாதிகள் கூட்டம் படித்த தீவிரவாதிகளை வேலைக்கு எடுப்பது, பயிற்சி அளிப்பது ஆகியவற்றில், தீவிரவாதத்தை அடக்குவதில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி அரசுகள் கவனம் செலுத்தவில்லை.
இதனால் மன்னர்களால் ஆளப்படும் மேற்காசிய நாடுகள், இந்த தீவிரவாதிகள் மூலம் தங்கள் மன்னர் ஆட்சிகளுக்கு சேதாரம் ஏற்படும் என்று பயப்படுகின்றன. இந்த அரேபிய நாடுகள் பல முறை எச்சரித்தும் பிரிட்டன் அமைதி கும்பல் அரசியல்வாதிகள், இந்த தீவிரவாதிகளை மறைமுகமாக மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் ஊக்குவிற்கின்றனர்.
Correct, Very Valid Comment...
தன்வினை தன்னைச்சுடும் ....... பங்களாதேஷில் இருந்து பலான நடிகைகள் கூட அங்கே செட்டில் ஆகிவிட்டனர் .....
உலகின் கடைசி இருக்கும்.... வரையில் உலகத்தில் அமைதி இருக்காது.
இதிலே பிரான்ஸ் இத்தாலி நாடுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
யு.ஏ.இ. மாணவர்களுக்கு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ள தாம்.
மற்ற நாட்டு இஸ்லாமிய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் உண்டாம்.
என்ன சொல்ல வருகிறது யு.ஏ.இ. அரசு ?
தங்கள் நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டிற்குள் மத கலவரம் செய்ய வழி செய்யும் வழிகளை அடைத்து விட்டோம்.
ஆனால் உலகில் உள்ள மற்ற நாடுகளில் கலவரம் ஏற்படும் வாய்ப்புகளுக்கு தொடர்ந்து பண உதவி செய்வோம் என்கிறது.
என்னே இவர்களின் நல்லெண்ணம்
ஒன்று மொத்தமாக நிறுத்த வேண்டும்
பெற்ற தாயை, பிறந்த தாய் நாட்டை வணங்க மாட்டேன் என சொல்பவன் நிச்சயமாக துரோகம் செய்வான்.
ஜாதி, மதம் பார்க்காமல் ஒரு மாணவர் பெற்றோர், சகோதரர்கள், உறவினர், சமூக குற்றம் அறிந்து உயர் கல்வி கற்பிக்க வேண்டும். பயங்கர வாதிகள் இலக்கு மனித உரிமை போர்வையில் மற்ற நாட்டு குடிமக்களை அடிமை படுத்த முயற்சி, பிறர் செல்வங்களை கொள்ளையடித்தல், கொடிய வன்முறையை வளர்த்தல். அரபு நாடுகள் கூட தீவிரவாதத்தில் பாதிக்கும் நிலை. சர்வதேச அமைப்பு உருவாக்குவது கடினம். தன் கையே தனக்கு உதவி. மத வாத பிரச்னைக்கு சீனா விழிப்புணர்வு இந்தியாவில் வளர வேண்டும்.
உலகில் தீவிரவாதிகள் என்றால் அவர்கள் மார்கத்தவர்கள் தான் என்று எண்ண தோன்றுகின்றது....
இன்னும் சில நாட்களில் பிரிட்டனில் அகதிகளாக வந்து குடியேறிய முஸ்லீம்களால் அந்த நாடு எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட போகிறது என்பதை நாம் கண் முன்னே பார்க்கத்தான் போகிறோம்.
அந்தக் காலத்தில் இந்த பிரிட்டிசார் நமக்கு பண்ணிய கொடுமைக்கும், பண்ணிய பாவத்துக்குமான சம்பளத்தை பெற வேண்டிய நேரம் அவர்களுக்கு நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்தும் உண்மை.
ஒரு காலத்தில் இந்தியாவில் அணைத்து வித பிரிவினை வாத சூழ்ச்சிகளை செய்து செல்வ வளங்களை கொள்ளை அடித்து கொழுத்த நாட்டுக்கு இன்று செக் வைக்கிறது இஸ்லாமிய பயங்கரவாதம்.மேலும்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை