கடந்தாண்டில் 65,005 விபத்துகளில் தமிழகத்தில் 16,553 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம்: தமிழகத்தில் 2025ம் ஆண்டில் நடந்த 65 ஆயிரத்து 5 சாலை விபத்துகளில் 16 ஆயிரத்து 553 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 195 விபத்துகளும் 50 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜன.,1 முதல் 31 வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. தினமும் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டில் ஜன., முதல் நவ., வரை நடந்த சாலை விபத்துகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 65,005 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 16,553 பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக தினமும் 195 விபத்துகளும், 50 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
விபத்துகளின் எண்ணிக்கையில் சென்னை 3777, செங்கல்பட்டு 3509, கோவை 3406 என முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இதனால் ஏற்பட்ட அதிக உயிர் பலியில் கோவை 895, திருப்பூர் 774, செங்கல்பட்டு, மதுரை 773 என முதல் மூன்று இடங்களில் உள்ளன.
ஜன., முதல் நவ., வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5000 முதல் 6000 விபத்துகள் பதிவாகியுள்ளன. அதே போல் 2024 ல் 67,526 விபத்துகளில் 18,449 பேர் உயிரிழந்துள்ளனர்.2024 விட 2025ல் விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
எல்லாம் கவனக்குறைவு மற்றும் மதுபானங்கள்.
16553 வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துவிடும்.
சென்ற ஆண்டில் நாலாயிரம் பேரில் ஒருவர் விபத்தில் இறந்திருக்கிறார். இன்னும் எத்தனை பேர் கை கால் துண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டார்களோ. அதாவது ஆண்டுக்கு 10,000 விதவைகளை நடுத்தெருவில் நிற்கவைக்கும் டாஸ்மாக்கை விட சேதம் அதிகம். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஏன் விபத்து என்று முழு விபரத்தோடு பட்டியலிட்டு இருக்கலாமே.
தமிழகத்தை போதையில் தள்ளாட வைத்து போக்குவரத்து சாலை விபத்தில் அதிக உயிர்கள் மாண்ட மாநிலமாக மாற்றி தமிழகத்தை நம்பர் ஒன்னு ஆக்கிய தமிழக முதல்வரை என்னவென்று புகழ்வது...
நம்ப தமிழ்நாட்டு பயபுள்ளைங்க குறிவச்சு ஓட்றாங்க போல இருக்கு.. .. சும்மாவா...ட்ரைவிங் ஸ்கூல் ட்ரைனிங் அப்டி... குறி வச்ச இறை விழனும்... இனி டார்கெட் 2026...I...மேலும்
-
எதிர்காலப் போர்களுக்கு தயாராகி வருகிறோம்; ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேச்சு
-
ஈரானில் இந்திய மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து அடவாடி; மத்திய அரசுக்கு ஓவைசி வலியுறுத்தல்
-
இந்த முறை தோட்டாக்கள் தப்பாது... அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு டிவி மிரட்டல்
-
ஜனநாயகன் பட விவகாரம்; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
-
ராணுவ தினத்தன்று வீரர்களுக்கு சல்யூட்; வீரர்களின் சேவையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராஜ்நாத் சிங்
-
அனைவரும் நல்லா இருக்கணும்; ரஜினி பொங்கல் வாழ்த்து