மைனாரிட்டி பெயரை சொல்லி தி.மு.க.,வினர் ஏமாற்றுகின்றனர்

1

@quote@ மத்திய அரசிடம் இருந்து, 5 லட்சத்து 60,000 கோடி ரூபாயை, தமிழக அரசு பெற்றுக்கொண்டு மூடி மறைக்கிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நடிகர்களை பார்க்கச்சென்று இறந்தால் 40 லட்சம் ரூபாய், சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் என தி.மு.க., அரசு கொடுக்கிறது. காங்., - தி.மு.க., கூட்டணி ஊழல் கூட்டணி.

பா.ஜ.,வினர் நாங்கள் ஹிந்துக்கள் என பெருமையோடு சொல்கிறோம். ஆனால், தி.மு.க.,வினர், 'கடவுள் நம்பிக்கை இல்லை' என சொல்கின்றனர். ஆனால், அவர்கள் வீட்டு பெண்கள், வீட்டுக்குள் தீபம் ஏற்றுகின்றனர்; கோவிலுக்கு செல்கின்றனர். இதை மறைத்துவிட்டு, தி.மு.க.,வினர் பிள்ளையார் சிலைகளை உடைக்கின்றனர்; மைனாரிட்டி பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என பாகுபாடு பார்க்காமல், அனைவருக்குமான திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வருகிறார்.


- குஷ்பு , துணைத்தலைவர், தமிழக பா.ஜ.,quote

Advertisement