சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீனப்பெண் கைது
லக்னோ: இந்தியா - நேபாளம் எல்லை வழியாக சட்டவிரோதமாக ஊடுருவிய சீனப் பெண்ணை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தியா - நேபாளம் எல்லை வழியாக பெண் ஒருவர், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இருக்கும், பைரியா பசார் பகுதிக்குள் நுழைந்துள்ளார். அப்போது, எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்தப் பெண் சீனாவைச் சேர்ந்தவர் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, சீனப் பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அவருடன் கண்டெடுக்கப்பட்ட சீட்டில் இருந்த தகவலின்படி, அந்தப் பெண் சீனாவைச் சேர்ந்த ஹுவாஜியா ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் சீன மொழியை மட்டும் பேசுவதால், அதிகாரிகளால் வேறு தகவல்களை திரட்ட முடியவில்லை. அவர் சீனாவில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?, இந்தியாவுக்குள் வந்ததற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கவட்டில முள்வேலியை வெச்சு விசாரியுங்க ....மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது